Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 19, 2010

பிரான்சு நாட்டில் எடை குறைப்பு மருந்து சாப்பிட்ட 500 பேர் பலி!!

பிரான்சு நாட்டில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்று உடல் எடையை குறைக்க புதிய மருந்தை வெளியிட்டது. இந்த மருந்தை பல லட்சம் பேர் வாங்கி சாப்பிட்டு வந்தனர். இவர்களில் சிலர் திடீரென இறந்து விட்டனர். வேறு ஏதோ காரணங்களால் அவர்கள் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் எதனால் இறந்தார்கள் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் எடை குறைப்பு மாத்திரை சாப்பிட்டதால் தான் இறப்பு ஏற்பட்டது என்பது தெரிய வந்தது. இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் இந்த மாத்திரை சாப்பிட்டதால் உயிர் இழந்தது தெரிய வந்துள்ளது. இதனால் மாத்திரைக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
source:cnn

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...