Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 25, 2010

இன்னும் 10 ஆண்டுகளில் மலேரியாவே இருக்காது:விஞ்ஞானிகள் கணிப்பு

இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் கொடிய வகை மலேரியாவை உலகில் இருந்தே அழித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவத்துள்ளனர். மலேரியா ஒட்டுண்ணி பற்றி சேகரிக்கப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் இது கணிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் பாதி மலேரியாவால் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவுக்கு 1. 2 மில்லியன் மக்கள் பலியாவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான இறப்புக்கு காரணம் கொசுவால் பரப்பப்படும் உயிரினம் பிளாஸ்மோடியம் பால்சிபரம். இது ஆப்பிரிக்காவை கடுமையாகத் தாக்குகிறது. மலேரியாவால் உயிர் இழப்பவர்களில் 90 சதவிகதம் பேர் ஆப்பிரிக்கர்கள் தான்.

விஞ்ஞானிகள் பிளாஸ்மோடியம் பால்சிபரம் பற்றிய தகவல்களை கடந்த 5 வருடமாக சேகரித்தனர். அதன் அடிப்படையில் தான் இதை எப்பொழுது முழுமையாக அழிக்க முடியும் என்று ஊகித்துள்ளனர்.

இந்த ஒட்டுண்ணி பரவும் வேகத்தை 90 சதவிகிதத்திற்கு மேல் குறைத்துவிட்டால் இதை இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் உலகில் இருந்து அழித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள அதிநவீனக் கருவிகளின் மூலம் இதை அமெரிக்காவில் இருந்து அழிப்பது சாத்தியம். ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கால்சிபரத்தை அழிப்பது சிறிது கடினம் என்று புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆன்ட்ரூ டாடெம் தெரிவித்துள்ளார்.

மலேரியா உள்ள 99 நாடுகளில் 32 நாடுகள் இந்நோயை தங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றத் தொடங்கிவிட்டன. மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட மலேரியா அதிகமாகப் பரவுவது தான் பிரச்சனையாக இருந்தது. குறிப்பாக மியான்மர், கம்போடியா மற்றும் வியட்நாமில் தான் இந்தப் பிரச்சனை அதிகம் இருந்தது
Source:thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...