Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 27, 2012

ஈராக் இந்தியாவிடம் பாஸ்மதி அரிசி வாங்குவதை நிறுத்த வேண்டும் – அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஹூஸ்டன்/டெக்ஸாஸ்:
அமெரிக்காவில் அதிகம் அரிசி விளையக்கூடிய மாகாணங்களைச் சேர்ந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈராக் இந்தியாவிடம் பாஸ்மதி அரிசி வாங்குவதை நிறுத்திவிட்டு தங்கள் நாட்டில் விளையும் அரிசியை வாங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

மேலும் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதி ‘டெட் போ’ கூறும்போது அமெரிக்கா ஈராக்கை சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுவிக்கவும்?!!! மற்றும் அந்நாட்டை புனர் நிர்மாணம் செய்யவும் பல பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது. எனவே ஈராக் தனது வர்த்தகத்தில் அமெரிக்காவை முன்னிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தாங்கள் ஈராக்கை விடுவித்தது?? ஒரே நோக்கத்திற்க்குதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவை சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈராக்கின் வர்த்தகத்துறை அமைச்சர் கைர் அல்லா பபக்கருக்கு மீண்டும் அமெரிக்க அரிசி வகைகளுக்கு மாற வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளனர்.
அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் ஈராக்கிற்கு அமெரிக்காவின் அரிசி விநியோகம் கடந்த 2010 மற்றும் 2011 ஆண்டிற்கு இடையில் 77% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஈராக் வர்த்தகத்துறை; மக்கள் இந்திய பாஸ்மதி அரிசியை மிகவும் விரும்புவதால்தான் தாங்கள் இந்தியாவிடம் பாஸ்மதி அரிசி வாங்குவதாகவும் மேலும் இந்திய பாஸ்மதி அரிசி மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க விவசாயிகள் ஈராக் மக்கள் விரும்பும் அரிசியை உருவாக்க தவறிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...