Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 02, 2012

47 நாட்கள் நடைபயணமாக சென்று மக்காவை அடைந்த அமீரக குடிமகன்

துபாய்:அமீரகத்தைச் சேர்ந்த ஜலால் பின் தானேயா உடல் மற்றும் மனதளவில் பாதிப்புடைய சிறுவர்களுக்கு உதவி புரியும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை சேகரிக்கும் விதமாக அபுதாபியில் உள்ள ருவைசிலிருந்து மக்காவிற்கு 47 நாட்களுக்கு முன் தனது லட்சிய பயணத்தைத் தொடங்கினார். அவர் 47 நாட்களுக்குப் பின் கடந்த திங்கள் அன்று மக்காவை அடைந்துள்ளார்.

அவர் மக்காவில் உள்ள புனித காபாவை அடைந்த பின்னர் தனது ட்விட்டரில் ” ‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே’ நான் புனித மஸ்ஜிதுல் ஹராமை அடைந்து விட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும் நான் எனது லட்சிய பயணத்தை முடித்துவிட்டேன் என்றும் தற்போது உம்ரா செய்யப்போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...