Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 21, 2012

இந்திய பணியாளர்களுக்கு நடப்பாண்டில் 11.9 சதவீதம் சம்பள உயர வாய்ப்பு: ஆய்வில் தகவல்

புதுடெல்லி, பிப்.21-

உலக மனிதவள ஆலோசனை மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான ஏயான் ஹேவிட் நிறுவனம் உலக நாடுகளில் சம்பள உயர்வு குறித்த ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள பணியாளர்களுக்கு 11.9 சதவீதம் சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவுக்கே அதிகளவு சம்பள உயர்வுக்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் கூறப்படுகிறது.

மேலும், சீனா 9.5, பிலிப்பைன்ஸ் 6.9, ஆஸ்திரேலியா 4.6, ஹாங்காங் 5, ஜப்பான் 2.8, மலேஷியா 6.2, சிங்கப்பூர் 4.8 சதவீத அளவில் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் எதிர்கால பொருளாதார சூழ்நிலையை நன்கு உணர்ந்து அதன்படி திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் இந்த சம்பள உயர்வுக்கு தயாராக உள்ளன என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...