Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 15, 2011

இந்தியர்களுக்கு மீண்டும்! அமெரிக்கா

இந்தியாவில் மீண்டும் தகவல்தொழில்நுட்ப அவுட்சோர்சிங் மற்றும் பேக் ஆபிஸ் புரா‌ஜெக்ட் திட்டங்களை ஒப்படைக்க இருப்பதாக அமெரிக்காவின் முனன்ணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான சிட்டிகுரூப், ஜேபி மார்கன் மற்றும் பேங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்டவைகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அமெரிக்காவின் பொருளாதாரம், சமீபத்தில் கடும் வீழ்ச்சி கண்டது. தற்போது, அதிலிருந்து மெல்ல‌ மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். விரைவில், பழைய நிலையை அடை‌ந்து விடுவோம் என்பதில் எவ்வித சந்தேகமுமி்லலை. அமெரிக்க அரசின் புதிய அவுட்சோர்சிங் கொள்கைகள் மற்றும் புதிய ஒருங்கிணைந்த வங்கிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் மூலம் மீண்டும், புதிய நிலையை அடைய தீர்மானித்துள்‌ளோம்.

இந்தியாவில், மீண்டும் தகவல்தொழில்நுட்ப அவுட்சோர்சிங் மற்றும் பேக்ஆபிஸ் பு‌ராஜெக்ட் திட்டங்களை ஒப்படைக்க உள்ளதாகவும், இதன்மூலம், 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...