Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 08, 2013

புத்தகயா குண்டு வெடிப்பில் நரேந்திர மோடிக்கு தொடர்பு?

புத்தகயாவில் உள்ள ஆலயத்தில் நேற்று நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கும் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தனது 'டுவிட்டர்' பக்கத்தில் திக்விஜய் சிங் எழுதியுள்ளதாவது:- புத்தகயா குண்டு வெடிப்பு சம்பவத்தில் முதல் கட்டத்திலேயே இஸ்லாமியர்கள் சிலரின் செயல்தான் என்று கூறிவிட முடியாது. இதற்கு மறுபக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும் என்று அமித்ஷா வாக்குறுதி அளிக்கிறார்.

பீகாரில் பா.ஜ.க. தொண்டர்களிடையே பேசிய குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள் என்று உத்தரவிடுகிறார்.

இதற்கு அடுத்த நாள் மகாபோதி ஆலயத்துக்குள் குண்டு வெடிக்கிறது. இவற்றுக்கெல்லாம் தொடர்பு இருப்பதாக தோன்றவில்லையா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாலேகான், டெல்லி ஜாமியா மஸ்ஜித்,சமிபத்திய பெங்களூர் குண்டுவெடிப்பு என்று நாட்டின் பல பகுதிகளும் காவி பயங்கரவாதிகளின் செயல் அதிகரித்துகொண்டே செல்லும் நிலையில் இந்த குண்டு வெடிப்பும் காவிகளின் கைவரிசையா என்று காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும். வெறுமனே  முஸ்லிம்களின் மீது பலிப்போட்டு அப்பாவிகளை
கைது செய்யாமல் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் நமது காவல்துறை இறங்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...