Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 10, 2012

உ.பியில் முஸ்லிம்களுக்கு 9 சதவீத உள் ஒதுக்கீடு: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

ஃபாரூக்காபாத்:உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு 9 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான அங்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரமும் சூடுபிடித்துள்ளது.

அங்குள்ள ஃபரூக்காபாத் தொகுதியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயீஸ் போட்டியிடுகிறார். அங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சல்மான் குர்ஷித் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு ஏற்கெனவே எடுத்துள்ளது. இப்போது நான் உங்களுக்கு புதிய வாக்குறுதியை அளிக்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு 9 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவோம் என்றார் அவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...