Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 08, 2011

ஆப்கான் படைகளுக்கு இந்தியா பயிற்சி

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியிருக்கிறது.
2014ல் ஏற்கனவே அறிவித்தபடி, அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தானில் செல்வாக்கை நிலைநாட்ட அண்டை நாடுகள் பல போட்டி போடும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானை தனது கேந்திர விவகாரக் கொல்லைப்புறமாகக் கருதும் பாகிஸ்தானுக்கு இந்த ஒப்பந்தம் எரிச்சலைத் தரும் ,எனவே இது இந்திய பாகிஸ்தான் உறவுகளைப் பாதிக்கும் என்றும் சில நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் இப்படியான பயிற்சிகளை இந்தியா ஏற்கனவே அளித்து வருகிறது என்றும் அது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார், இந்தியாவின் அமைச்சரவை செயலகத்தின் ஓய்வு பெற்ற கூடுதல் செயலரும், பாதுகாப்பு ஆய்வாளருமான பி.ராமன்.

தற்போது ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சிகளை அளித்து வரும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை விட இந்தியாவுக்கு பாகிஸ்தான் குறித்த விடயங்கள் நன்கு தெரியும் என்பது, அந்தப் படையினரை இந்தியா பயிற்றுவிக்க ஒரு முக்கிய காரணம் எனவும் ராமன் கூறுகிறார்.

இந்தியத் தரப்பு ஆப்கான் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு அமெரிக்காவும் மறைமுக ஆதரவை தெரிவித்துள்ளது என்று சுட்டிக்காட்டும் அவர், இது பாகிஸ்தானை ஆத்திரமடையச் செய்து, இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது எனவும் ராமன் தெரிவிக்கிறார்.



இந்த உடன்பாடு பாகிஸ்தானின் கவலைகளை அதிகரிக்கச் செய்யும் எனவும், ஆப்கானிஸ்தானில் எந்த வகையிலும் இந்தியாவின் தலையீட்டை ஏற்காது எனவும் உடன்பாட்டை சீர்குலைக்கவும் பாகிஸ்தான் முயலும் எனவும் அவர் கூறுகிறார்.
ஆப்கானிஸ்தானுடன் இந்தியா ஏற்படுத்தியுள்ள இந்த உடன்பாட்டுக்கு பின்னர் இந்தியா பாதுகாப்பு விடயங்களில அதிக விழிப்புடன் இருக்க வேண்டி வரும் எனவும் பாதுகாப்பு ஆய்வாளர் ராமன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
அமெரிக்கா விரும்பியதாலேயே இந்தியா இந்த உடன்பாட்டை கையெழுத்திட்டுள்ளது எனவும் ராமன் கூறுகிறார்.
source:தமிழோசை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...