Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 13, 2011

காட்டுமன்னார்கோவிலில் உள்ளாட்சிதேர்தல் ஏற்பாடு: கலெக்டர் ஆய்வு

காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதியில் தேர்தல் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் வரும் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று தேர்தலின் முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் அமுதவல்லி ஆய்வு மேற்கொண்டார்.காட்டுமன்னார் கோவில் ஒன்றியத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிதம்பரம் ஆர்.டி.ஓ., இந்துமதியிடம் தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஓட்டுச்சாவடி, ஓட்டு எண்ணும் மையங்களை பார்வையிட்டார். பி.டி.ஓ., க்கள் ஜமுனா, வாசுகி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.பின்னர் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குச் சென்ற அவர் அங்குள்ள தேர்தல் அலுவலரிடம் தேர்தல் குறித்து செய்ய வேண்டிய முன்னேற்பாடான பணிகளை செய்ய உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...