Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 28, 2011

சேத்தியாத்தோப்பு பகுதியில் மின் தடை நேரம் அதிகரிப்புபொதுமக்கள் கடும் அவதி

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு பகுதியில் மின் தடை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள்,கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.கடந்த ஓராண்டாக சேத்தியாத்தோப்பு பகுதியில் தினசரி இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்பட்டு வந்தது ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதன் படி இம்மாதம் சேத்தியாத்தோப்பு பகுதியில் காலை 8 மணி முதல் 10 மணி வரை மின் தடை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த ஒருவாரமாக 8 மணி முதல் 11 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் துறை அதிகாரிகளிடம் விசாரித்ததில் மின் தடை நேரம் 3 மணி நேரமாக மாற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.மின் தடை நேரம் தற்போது கூடுதலாக ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...