Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 10, 2011

காட்டுமன்னார்கோவிலை கைப்பற்ற வி.சி.,- தே.மு.தி.க., பகீரத முயற்சி

காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் சீட் பெற தி.மு.க., கூட்டணியில் வி.சி.,யும், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வும் பகீரத முயற்சியில் இறங்கியுள்ளன.காட்டுமன்னார்கோவில் தொகுதியை பொறுத் தவரை தலித் பெரும்பான்மை உள்ள தனி தொகுதியாக விளங்கி வருகிறது. இத்தொகுதியில் இதுவரை நடந்த 11 சட்டசபை தேர்தல்களில் 6 முறை தி.மு.க.,வும், இரு முறை காங்., கட்சியும், அ.தி. மு.க., - வி.சி., தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2006 சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க., கூட்டணி சார்பில் வி.சி., வேட்பாளராக களம் இறங்கிய ரவிக்குமார் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ., வாக இருந்த வள்ளல்பெருமானை பார்த்து பழகிய மக்கள் புதிய முகமாக தெரிந்த ரவிக்குமாரை தேர்ந்தெடுத்தனர்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் சிட்டிங் எம்.எல்.ஏ., ரவிக்குமாரால் அதிருப்தியடைந்த வி.சி., தொண்டர்கள், தொகுதி மக்கள், வள்ளல்பெருமானே தேவலாம் என்ற விரக்திக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எப்போதாவது இவர் தொகுதிப் பக்கம் வந்தால் கட்சியினருக்குள் பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. இதனால் இந்த முறை வி.சி., கட்சியில் புதிய வேட்பாளர் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என வி.சி., கட்சியினரே தெரிவிக்கின்றனர். ஆனால் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., சிட்டிங் எம்.எல்.ஏ., ரவிக்குமார் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆதரவோடு மீண்டும் போட்டியிட முயற்சிக்கிறார்.

ஆனால் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட்டால் கண்டிப்பாக தோற்கடிப்போம் என வி.சி., தொண்டர்களே சவால் விடுகின்றனர்.தி.மு.க., கூட்டணி நிலைமை இப்படி இருக்க, அ.தி.மு.க.,வே தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.ஆனால் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தே.மு.தி.க., ஒற்றைக்காலில் நிற்பதாக கூறப்படுகிறது.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு



 தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில இணைச் செயலர் இரா.காவியச்செல்வன் கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்துள்ளார்.

 ÷இரா.காவியச்செல்வன் கட்சி மாவட்டச் செயலராக 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...