Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 16, 2011

ராஜ்யசபா உறுப்பினராக ரபி பெர்னார்ட் தேர்வு!

சென்னை: 
நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபை உறுப்பினராக அ.தி.மு.க. சார்பில் ரபி பெர்னார்ட் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை, அவர் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். நாடாளுமன்றத்தின் ராஜ்ய சபையில் அ.தி.மு.க. உறுப்பினராக இருந்த கே.வி.ராமலிங்கம், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தமிழக அமைச்சர் ஆனார். இதைத்தொடர்ந்து தனது எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார். காலியாக இருந்த இடத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ஆ.வில்லியம் ரபி பெர்னார்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து சிலர் மனுதாக்கல் செய்தனர். ஆனால் ராஜ்ய சபா உறுப்பினராக ரபி பெர்னார்ட் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...