Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 03, 2015

இளைஞர்களுக்கு மெக்கானிக்காகும் வாய்ப்பு!


நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சுக்கு தடை!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரபங்கி நகரில் மேகி நூடுல்சில் அதிக அளவில் ரசாயன பொருள் கலந்து இருப்பது கண்டறியப்பட்ட தகவல் சுதிர்குமார் ஓஜாவுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர், முசாபர்பூர் நகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்திய தண்டனை சட்டம் 270, 273, 276 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்று கொண்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமச்சந்திர பிரசாத் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து மாறு உத்த்ரவிட்டார்.

மேகி நூடுல்ஸ் விளம் பரங்களில் நடித்த நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரிதீட்சித், பிரித்தீ ஜிந்தா ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வக்கீல் சுதிர்குமார் ஓஜா கோரிக்கை விடுத்தார். இதையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி, தேவைப்பட்டால் அமி தாப்பச்சன், மாதுரிதீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேகி நூடுல்ஸ் பற்றிய இந்த சர்ச்சை காரணமாக கடைகளில் அதன் விற்பனையை நிறுத்தி வைக்குமாறு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டியம், பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், அரியானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மேகி நூடுல்சை பரிசோதனை கூடங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளன. அந்த ஆய்வறிக்கை வந்த பிறகு மேகி நூடுல்ஸ் மீதான

ஜூன் 02, 2015

முட்டம் பாலம் ஜெயலலிதா அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள முட்டம் ஊராட்சி,மயிலாடுதுறை தொகுதியில் முடிகண்டநல்லூர் ஊராட்சி இரண்டையும் இணைக்கும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காணொளி காட்சி மூலம் இன்று பிற்பகல்2.00 மணிக்கு திறந்து வைத்தார். காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் தலைமை தாங்கினார்.

நன்றி: என்.முருகுமாறன் (சட்டமன்ற உறுப்பினர்)

மே 29, 2015

பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் எதிர்நோக்கி உள்ள பிரச்சினைகள்!

1.மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா பகுதியில் வாழும் முஸ்லிம் இன மக்களே ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர்.

 2.பர்மா அரசு இந்த மக்களுக்கு பிரஜை உரிமை , பயணம் செய்யும் சுதந்திரம் ,கல்வி பெறும் உரிமையை முற்றிலுமாக மறுத்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்

 3.ரோஹிங்யா முஸ்லிம்கள் புத்த பெரும்பான்மை மக்களால் திட்டமிட்ட பிரச்சினைகள் மற்றும் தாக்குதல்களை தொடர்ந்து எதிர்கொள்கின்றார்கள்

4.கடந்த மூன்று ஆண்டுகளில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படகினால் தப்பித்து செல்ல முயன்றோர் எண்ணிக்கை 1,20,000 பேர் .

5.அருகே உள்ள நாடுகள் அவர்களுக்கு அடைக்கலம் தரவில்லை

6.ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் தாய்லாந்த் நாடுகளுக்கு முன்னேறினார்கள் .தாய்லாந்த் கடல் படை அவர்களை திருப்பி

கொள்ளுமேட்டில் தமிழக அரசின் விலையில்லா பொருள்கள் விநியோகம்!

கடந்த நான்கு ஆண்டுகளாக இதோ அதோ என்று சொல்லப்பட்ட தமிழக முதல்வரின் விலையில்லா மிக்ஸி,கிரைன்டர்,பேன் உள்ளிட்ட பொருள்கள் இன்று (28-05-2015) கொள்ளுமேட்டில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.சட்டமன்ற உறுப்பினர் முருகமாரன் மற்றும் அருண்மொழி தேவன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச பொருட்களை வழங்கினர்.ஒருவழியாக இலவச பொருட்கள் கிடைத்த மகிழ்ச்சியில் மக்கள் வாங்கிசென்றனர்.


பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி முஹமதியா அவர்களுக்கு பாராட்டுவிழா!

நமதூர் முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் இந்த  ஆண்டு  பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி முஹமதியா (D/Oசைபுல்லாஹ்)அவர்களுக்கு அனுக்கிரஹா அறக்கட்டளையின்  சார்பில் காட்டுமன்னார்குடி AVR  மண்டபதில் பாராட்டுவிழா நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் மணிரத்னம் அவர்கள் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில்  பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மே 21, 2015

கொள்ளுமேடு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு! முஹமதியா முதலிடம்

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிகள் இன்று 21/05/2015 வெளியிடப்பட்டது இதில் நமதூர் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி 70% தேர்ச்சியை கண்டுள்ளது.மொத்தம் 28 மாணவர்களும் 28 மாணவிகளும் தேர்வு எழுதியத்தில் 44 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவி முஹமதியா M .I சைபுல்லாஹ் அவர்களின் மகள் (பக்கர் பிரதர்ஸ் குடும்பம்) 467 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் 

மாணவி  அப்ரின் பானு ( மர்ஹும் அப்துர்ரஹ்மான் அவர்களின் பேத்தி) 450 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் 

மாணவி ஆபிரா பானு (ஹலிபுல்லாஹ் அவர்களின் மகள்) 446 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து

பிப்ரவரி 24, 2015

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்கு தெருவில் வசிக்கும் அத்திக் அவர்களின் தந்தை  ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

வீராணம் ஏரியை குத்தகைக்கு விடும் விவகாரம்: மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

வீராணம் ஏரியில் மீன்பிடி உரிமையை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை கண்டித்து மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை மற்றும் கொள்ளுமேடு பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இதன் மூலம் சித்தமல்லி, அறந்தாங்கி, சென்னிநத்தம், மணவெளி, வானமாதேவி, புடையூர், நத்தமலை, வாழக்கொல்லை, கந்தகுமரன், சின்னமணல் மேடு, வெய்யலூர், கூத்தங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் வீராணம் ஏரியில் மீன் பிடிக்கும் உரிமையை தனியாருக்கு குத்தகைக்கு விட இந்த ஆண்டு

பன்றிக்காய்ச்சல் நோய் பற்றி பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை- கலெக்டர்

மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு தடுப்பூசி, மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் பன்றிக்காய்ச்சல் நோய் என்பது ‘ஏ‘ இன்ப்ளூயென்ஸா வகை வைரஸ் கிருமியினால் வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன் தான் பன்றிக்காய்ச்சல் நோயும் வரும். வைரஸ்கள் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டை வலி, சோர்வு, உடல்வலி, குளிர் போன்ற அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படக்கூடும்.

கைகளை நன்றாக கழுவ வேண்டும் இதனால் நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு

பிப்ரவரி 09, 2015

கொள்ளுமேட்டில் தீ விபத்து! அதிர்ச்சியில் மக்கள்!

கொள்ளுமேடு கடைத் தெருவில் உள்ள சிறு குடுசை கடைகள் தீயில் எரிந்து சாம்பலானது!சரியாக நள்ளிரவு 2:30 மணியளவில் நடந்த இந்த கோர சம்பவதில் குடிசை கடைகள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலானது.பொதுமக்கள் தீயை அணைக்க பெரும் முயற்சி செய்தும் கடைகள் எதையும் காக்க முடியவில்லை.

 தொடர்ச்சியாக நடைபெறும் இது போன்ற தீ விபத்து? சம்பவங்களால் கொள்ளுமேடு மக்கள் பெரும் குழப்பத்தில் இருகின்றனர். இவ்விபத்துகள்  தானாக நடைபெறுகின்றனவா அல்லது ஏதும் சதி  வேலைகள் இருக்குமா என்ற அச்சம் எழுகின்றது. இந்த சம்பவத்தில் காவல்துறை சரியான முறையில் செயல்பட்டு மக்களின் அச்சத்தை போக்கவேண்டும் என்று கொள்ளுமேட்டுவாசிகள் பெரும் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அணைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் அல்லாஹ் பொறுமையையும் பெரும் பொருளாதாரத்தையும் கொடுப்பானாக என்று கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் பிரார்த்திக்கும் அதேவேளையில். இதில் ஏதேனும் சதிவேலைகள் இருந்தால் அதில் ஈடுபட்டவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுவானாக என்றும் பிரார்திகின்றோம். அனைத்தையம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.

- அபூ தனாஸ் கொள்ளுமேடு