டாக்கா:ஷேக் ஹஸீனா அரசின் பாசிச நடவடிக்கையின் ஒரு பகுதியாக வங்கதேச ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லா(65) தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாஅத்தே இஸ்லாமி தொண்டர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கும், அவாமி லீக் தொண்டர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லாவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததையடுத்து, வியாழக்கிழமை இரவு அவர் தூக்கிலிடப்பட்டார். பரித்பூர் மாவட்டத்தில் அப்துல் காதர் முல்லாவின் சொந்த கிராமமான அபிராபாத்தில் வெள்ளிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் பிரிவான ஸத்ரே ஸபீர் உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசுடன்
ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லாவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததையடுத்து, வியாழக்கிழமை இரவு அவர் தூக்கிலிடப்பட்டார். பரித்பூர் மாவட்டத்தில் அப்துல் காதர் முல்லாவின் சொந்த கிராமமான அபிராபாத்தில் வெள்ளிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் பிரிவான ஸத்ரே ஸபீர் உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசுடன்














