Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 14, 2013

முல்லாவுக்கு மரணத்தண்டனை:வங்காளதேசத்தில் கலவரம்!

டாக்கா:ஷேக் ஹஸீனா அரசின் பாசிச நடவடிக்கையின் ஒரு பகுதியாக வங்கதேச ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லா(65) தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாஅத்தே இஸ்லாமி தொண்டர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கும், அவாமி லீக் தொண்டர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் அப்துல் காதர் முல்லாவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததையடுத்து, வியாழக்கிழமை இரவு அவர் தூக்கிலிடப்பட்டார். பரித்பூர் மாவட்டத்தில் அப்துல் காதர் முல்லாவின் சொந்த கிராமமான அபிராபாத்தில் வெள்ளிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் பிரிவான ஸத்ரே ஸபீர் உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அவர்கள் போலீசுடன்

டிசம்பர் 12, 2013

நாளைய ஜும்ஆ உரையின் தமிழாக்கம் -ஐக்கிய அரபு அமீரகம்




கொள்ளுமேடு,காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் முக்கிய பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், கண்டமங்கலம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம், ஆயங்குடி, கஞ்சங்கொல்லை, புத்தூர், முட்டம், விளாகம், டி.நெடுஞ்சேரி, விருந்தாங்கநல்லூர், கந்தகுமாரன், கொள்ளுமேடு,மதுராந்தகநல்லூர், குமராட்சி, ம.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இத்தகவலை சிதம்பரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுதப் போர் மூண்டால் 200 கோடி பேர் கொல்லப்படுவர்!

இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுஆயுதப் போர் மூண்டால் சுமார் 200 கோடி பேர் கொல்லப்படுவார்கள் என்று சர்வதேச அமைப்பு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச மருத்துவர்களின் அணுஆயுத போர் தடுப்பு கூட்டமைப்பின் (ஐ.பி.பி.என்.டபிள்யூ.) இணைத் தலைவர் ரா ஹெல்பன்ட், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1947-ம் ஆண்டு முதல் இந்தியா வும் பாகிஸ்தானும் 3 முறை கடும் போர்களில் ஈடுபட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போர் மூண்டால் பேரிழப்புகள் ஏற்படும். உலக மக்கள் தொகையில் 3-ல் ஒரு பங்கு மக்கள்டுகொல்லப்படு வார்கள். அதாவது சுமார் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படும் அபாயம் உள்ளது. தெற்காசியாவில் அணுகுண்டுகள் வெடித்தால் அமெரிக்காவின் வேளாண் உற்பத்தி 10 சதவீதம் குறைந்துவிடும். அருகில் உள்ள சீனாவில் கோதுமை உற்பத்தி 50 சதவீதம் பாதிக்கப்படும். இதனால் சீனாவில் உணவுப் பஞ்சம் ஏற்படும். அணுகுண்டு கதிர்வீச்சால் சுமார் 100 கோடி பேர் கொல்லப்பட்டால், அதன்பின் அந்த சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் உணவுப் பஞ்சத்தால் மேலும் 100 கோடி

மஹராஷ்ட்ரா சட்டப்பேரவையில் மூட நம்பிக்கைக்கு எதிரான மசோதா தாக்கல்!

மஹராஷ்டிர சட்டப் பேரவையில் மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதாபுதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.சமூக நீதித்துறை அமைச்சர் சிவாஜிராவ் மொகே இந்த மசோதாவை தாக்கல்செய்தார். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பானசமூகச் சூழலை உருவாக்குவதற்கும், அப்பாவி பொதுமக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து பாதுகாக்கவும் இந்த மசோதா வழி வகுக்கும் என்று சட்டப்பேரவையில் சிவாஜிராவ் கூறினார்.

டிசம்பர் 11, 2013

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் குற்றம்தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமல்ல என, கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377-ன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர், பரஸ்பரம் விருப்பத்துடன் தனிமையில் உறவு கொள்வது குற்றமாகாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம், உத்கல் கிறிஸ்தவ கவுன்சில், அபோஸ்தல் தேவாலய கூட்டமைப்பு போன்ற மத அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஓரினச் சேர்க்கை குற்றம்தான் என உச்ச நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

'ஓரினச் சேர்க்கை குற்றம். இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க முடியும்' என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
மேலும், சட்டப் பிரிவு 377-ஐ நீக்குவது குறித்து அரசே முடிவு செய்ய

கடலூரில் 14–ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்!

                                                   
தனியார்   நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கு ஆட்களை
தேர்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாம் கடலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 14–ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியுடைய 19 முதல் 40 வயதுக்குட் பட்டவர்கள் தங்கள் மதிப்பெண் சான்று நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை நகல், குடும்ப அடையாள அட்டை நகல், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது என்று

டிசம்பர் 07, 2013

சிதம்பரம் பகுதியில் பால் விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சிதம்பரம் பகுதியில் மொத்தமாக பால் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கலப்பட பால் மற்றும் காலாவதியான பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா, கீரப்பாளையம், புவனகிரி ஒன்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அருண்மொழி, குணசேகரன் ஆகியோர் நேற்று காலை சிதம்பரம் நகரில் உள்ள பால் பாக்கெட்டுகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

சபாநாயகர் தெரு, கீழத்தெரு மாரியம்மன் கோவில், அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள கடைகளுக்குள் சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகளை எடுத்து தயாரிப்பு தேதியை சரி பார்த்தனர். மேலும் காலாவதி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு நடத்தினார்கள். குளிர்சாதனபெட்டி சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா பால் மொத்த விற்பனை கடைகளில் இருந்து பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை ஆய்வு செய்வதற்காக சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் பரிசோதனை மையத்திற்கு

டிசம்பர் 05, 2013

”டிசம்பர் 6” பாபர் மஸ்ஜித் உண்மை வரலாறு! (Tamil & English)

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 



பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
‘இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக்

கடலூர் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 11 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து!

கடலூர் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 11 பேரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்து வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி அங்கமுத்து உத்தரவின் பேரில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முக்கிய சந்திப்புகளில் நின்று 4,225 வாகனங்களை தணிக்கை செய்தனர்.

இதில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தல், அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை வாகனத்தில் பொருத்தி இருத்தல், அதிக பிரகாசமான முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டது, சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் ஒட்டாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 277 வாகன ஓட்டிகளின் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி அங்கமுத்து கூறியதாவது:–

ரூ.17½ லட்சம் அபராதம்: கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை செய்தனர். இதில் அளவுக்கு அதிகமாக சுமை ஏற்றி சென்றது தொடர்பாக 61 வாகன ஓட்டிகள் மீதும், பக்கவாட்டு கண்ணாடிகளில் கருப்பு நிற பிளாஸ்டிக் பேப்பர்களை ஒட்டிவைத்தது

2015 ஆம் ஆண்டில் சந்திரனில் காய்கறிகள், தாவரங்கள் வளர்க்க திட்டம்-நாசா

மனிதர்கள் வாழவும் மற்றும் பூமியின் இயற்கையான செயற்கைகோளில் பணியாற்ற முடியும் என்பதை புரிந்து கொள்ள, 2015-ம் ஆண்டில், சந்திரனில் டர்னிப் மற்றும் துளசி போன்ற தாவரங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்க நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலவின் மேற்பரப்பில், ஒரு கமர்ஷியல் லூனார் லேண்டர் போர்டில் தாவரங்களை அனுப்பி வளர்க்க உள்ளோம் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த முயற்சியை லூனார் பயிர் வளர்ச்சி வசிப்பிட அணி மூலம் இயக்கப்படுகிறது. அவர்கள், காலநிலை கடுமையான சக்திகளுக்கெதிராக தாவரங்களை பாதுகாக்க கன்டெய்னர்களை வடிவமைத்து அதனை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். சந்திரனில் ஐந்து முதல் பத்து நாட்களுக்குட்பட்ட காலப்பகுதியில் தாவரங்கள் முளைப்பதற்காக ஒரு மிக எளிய அடைக்கப்பட்ட வளர்ச்சி அறை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. இந்த கன்டெய்னர்