Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 29, 2012

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை

கடலூர், : கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளில் புழங்கு காலத்தை 1.1.13 முதல் 31.12.13 வரை நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி நியாய விலை கடைகளில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது.

 எனவே குடும்பத்தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை கடைக்கு சென்று 2013ம் ஆண்டிற் கான உள்தாள் இணைப்பு பெற்று கொண்டு கடைகளில் பராமரிக்கப்படும் 2012ம் ஆண்டின் வழங்கல் பதிவேட்டில் கையொப்பமிட்டு அல்லது இடது கை பெருவிரல் ரேகை பதிக்க கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப அட்டை களை புதுப்பிக்க நியாய விலை கடை பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனு டைய விபரம் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தங்களுக்குரிய நாளில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...