Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 18, 2012

சங்கரன்கோவில்:இன்று வாக்குப்பதிவு!

திருநெல்வேலி:சங்கரன் கோவில் சட்டப்பேரவை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான கருப்பசாமி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.13 வேட்பாளர்கள் இங்கு போட்டியிடுகின்றனர்.

ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க – தி.மு.க இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இருந்தபோதிலும் ம.தி.மு.கவும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.தே.மு.தி.கவும் தனது வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

242 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. இத்தொகுதியில் மொத்தம் 2,06,087 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,02,921, பெண்கள் 1,03,166.

அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் போலீசாருடன் மத்திய துணை ராணுவப் படையின் 6 கம்பெனிகளைச் சேர்ந்தோர், பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் 1,160 வாக்குச் சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...