Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 30, 2012

உயர்ந்தது மின் கட்டணம்!!!

சென்னை: தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 புதிய மின் கட்டண உயர்வு விவரம் 
 வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில், தற்போது 50 யூனிட் வரை 75 காசுகள் வசூலிக்கப்படுகிறது. இதை 100 யூனிட்களாக உயர்த்தி யூனிட்டுக்கு ரூ. 1.10 என்று நிர்ணயித்துள்ளனர்.

 அதேபோல 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இனி யூனிட் கட்டணம் ரூ. 1.80 ஆக இருக்கும்.
 201 முதல் 250 வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ. 3 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 251 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ. 3.50 கட்டணமாகும்.

 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் இனி யூனிட்டுக்கு ரூ. 5.75 கட்ட வேண்டும்.
 புதிய கட்டண விகிதத்தில், 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இனிமேல் மானியம் கிடையாது. முழுக் கட்டணத்தையும் வாடிக்கையாளர்களே கட்ட வேண்டும்.
 100 யூனிட்டுக்கும் கீழ் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இருந்து வந்த குறைந்தபட்ச மின் கட்டணமான ரூ. 40 என்பது ரத்து செய்யப்படுகிறது.

 குடிசைகளுக்கு தற்போது
இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...