Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 07, 2012

மருத்துவக் காப்பீடுத் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏற்கனவே பயன்பெற்ற பயனாளிகளுக்கு காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 23ம் தேதி முதல், விருத்தாசலம் வட்டத்தில் 28ம் தேதி முதல் காப்பீட்டுத் திட்ட முகவர்களால் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
பயனாளிகள் அனைவரும் ஒப்புதல் அளித்து அடையாள அட்டைகள் பெற்றுக் கொள்ளலாம். குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள விடுபட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பப் படிவத்தினை தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் புகைப்பட அலுவலகத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...