Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 03, 2012

சம்பளத்தை மனைவியிடம்தான் தருவோம்: இந்தோனேசியா அரசு அடம்

இந்தோனேசியா : இந்தோனேசியா நாட்டில் ஆண் அரசு ஊழியர்களின் சம்பளப்பணம் முழுவதும் அவர்களின் மனைவியிடம் தரப்படுகிறது. ஆண்கள் தங்களின் சம்பளம் முழுவதையும் வேறு தொடர்புகளை செலவழிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவில் அரசு பணிகள் மேற்கொள்ளும் ஆண்கள் தங்களது சம்பள பணத்தை கள்ளக்காதலி மற்றும் விபசாரிகளிடம் செலவு செய்வதாக கூறப்படுகிறது. கணவர்களின் ஊதாரி தனமான செலவினால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுவதாக அரசு ஊழியர்களின் மனைவிகள் புகார் தெரிவித்தனர்.

இந்த புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வடக்கு சுலாவேசி தீவில் உள்ள உகாரண்டலோ பகுதி நிர்வாகத்தில் அதிக அரசு ஊழியர்கள் கள்ள தொடர்பில் ஈடுபட்டு பணத்தை செலவிடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு ஊழியர்களின் சம்பள பணத்தை அவர்களது மனைவி மார்களிடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து மனைவிமார்களின் பெயரில் பாங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டு சம்பள பணம் அதில் போடப்பட்டது. இந்த நடைமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது 3,200 அரசு ஊழியர்களின் சம்பள பணம் அவர்களது மனைவிகளிடம் இதுபோன்று நேரடியாக ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

நாடுமுழுவதும் அமல்

ஆண் அரசு ஊழியர்களின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசின் செய்தித் தொடர்பாளர் ரிப்ளி கட்லி கூறியுள்ளார். இந்த நடைமுறை விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா பெண்கள் கொடுத்துவைத்தவர்கள். நம் ஊரிலும் இதனை அமல்படுத்தினால் பெரும்பாலான ஆண்கள் டாஸ்மாக் போவது குறையும். தமிழக அரசு கவனிக்குமா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...