Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 06, 2010

வெளுத்தது ரஜினியின் காவி முகம்!!


சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக இன்று (5-10-2010) மட்டோஷ்ரியில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜனிகாந்த் சென்றிருந்தார்.

பால்தாக்ரேயின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினகாந்த்

‘பால்தாக்ரே கடவுளுக்கு நிகரானவர் அவர் எனக்கு கடவுள் மாதிரி எனக் தெரிவித்துள்ளார். பி.டி ஐ நியுஸ்

ரஜினிகாந்த மஹாராஷ்ட்டிரிய தம்பதிகளுக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இப்ப மேட்டருக்கு வருவோம்…

மேற்கண்ட செய்திக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை எனினும் நம் இஸ்லாமிய சமூக இளைஞர்களுக்காக ஒரு சில வரிகள்..

இன்றைக்கு எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு எனக் கூறி தனது இளைய பருவத்தை வீணடித்துக் கொண்டிருகின்றனர். யார் இந்த ரஜினிகாந்த என்ற உண்மையை இந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் உணர வேண்டும். முஸ்லிம் இனமே இந்தியாவில் இருக்கக்கூடாது என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ள பாசிச இயக்கத் தலைவன் தான் பால் தாக்ரே. இந்த பால்தாக்ரே தான் ரஜினிக்கு கடவுளாம்.

அப்படி எனில் கடவுளின் கொள்கையை (பாசிசம்) தான் பக்கதனும் (ரஜினி) பின் பற்றுவார் என்பது இதிலிருந்து தௌ்ளத் தெளிவாகத் தெரிகின்றது

பால் தாக்ரே கடவுள் மாதிரி என பகிரங்கமாகக் பேட்டியளித்து தனது பாசிச சிந்தனைக் கொண்ட காவி உருவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ரஜினகாந்த்.
கடவுள் என்றால் யார்?
ரஜினி காந்த் அவர்களே முதலில் கடவுள் என்றால் யார் என்று புரிந்து கொள்ளுங்கள் அதன் பின் அந்த கடவுளின் பெயர் என்ன என்பதை முடிவு செய்யுங்கள்.

உலகில் உண்மையான கடவுள் தத்துவத்தினை சொல்லும் மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான் என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள் இதோ இஸ்லாம் கடவுளுக்கு சொல்லும் வரைவிலக்கணத்தைப் பாருங்கள்.

அல்லாஹ் ஒருவன் என (முஹம்மதே!)கூறுவீராக!

அல்லாஹ் தேவைகளற்றவன்.

(யாரையும்)அவன் பெறவில்லை.(யாருக்கும்)பிறக்கவுமில்லை.

அவனுக்கு நிகராக யாருமில்லை.(112:1-4)

ரஜினிகாந்த் அவர்களே!
இந்த நான்கு வசனங்களும் சொல்லும் கருத்துக்களை சிந்தித்துப் பாருங்கள்.
முதல் வசனம் கடவுள்கள் எத்தனை என்பதை தெளிவாக சொல்கிறது.
இரண்டாம் வசனம் அவன் எந்தத் தேவைகளும் இல்லாதவன் என்பதை தெளிவாக விளக்குகிறது.
நான்காவது வசனம் கடவுளுக்கு பெற்றோர்களோ பிள்ளைகளோ இல்லை என்பதையும் அப்படி இருப்பதாக சொல்வது பெரும் அபத்தம் என்பதையும் தெளிவாக விளக்குகிறது.
ஐந்தாவது வசனமோ கடவுளுக்கு நிகராக யாரும் இல்லை அவன் தனித்தவன் யாரும் கடவுளாக மாற முடியாது அந்த அந்தஸ்தை பெறவும் முடியாது அப்படி சொல்வது பெரும் அபத்தம் பொய் புரட்டு என்பதையெல்லாம் தெளிவாக விளக்குகிறது.

ஆதலால் இந்த திருமறைக் குர்ஆனின் கருத்துக்களை சிந்தித்துப் பாருங்கள் அதன் படி நடந்து தூய இஸ்லாத்தை ஏற்று மரணத்தின் பின் உள்ள வாழ்க்கையில் வெற்றி பெற முன் வாருங்கள்.

இளைஞனே! உன்னிடத்தில் சில வார்த்தைகள்
நீ ரஜினி கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது உனக்கு நீயே சாவுமணி அடித்துக் கொள்வதற்கு சமம்..
நீ தியேட்டர் சென்று படம் பார்கும் பணமமெல்லாம் உன்னை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு நன்கொடையாக போகின்றது..
இனிமேலாவது திருந்துவார்களா நமது இஸ்லாமிய சமூக இளைஞர்கள்?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...