Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 25, 2010

ஆப்கானை விட்டு வெளியேறுகிறது நேட்டோ


தாலின்(எஸ்தோனியா):ஆப்கானிஸ்தானில் நேட்டோ தலைமையிலான அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் மக்கள் ஆதரவை இழந்துள்ள சூழலில் ஆப்கானிலிருந்து வெளியேற அமெரிக்காவும், நேட்டோவும் தீர்மானித்துள்ளன.
எஸ்தோனியா நாட்டின் தாலினில் நடைபெற்ற நேட்டோ வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானை விட்டு இவ்வாண்டு நவம்பர் முதல் வெளியேற ஆரம்பிப்பர்.ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரிடம் ஆப்கானிஸ்தானி பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் இம்மாதம் ஜுலையில் கையெழுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆப்கானில் ஸ்திரத்தன்மையையும், பாதுகாப்பையும் உறுதிச் செய்ய பல ஆண்டுகள் தேவைப்படும் எனக்கூறிய நேட்டோ நாடுகள் அதுவரை ஆப்கானில் குறைந்த அளவில் செயல்படவும் தீர்மானித்துள்ளன.2011 ஆம் ஆண்டு ஜுலையில் அமெரிக்க ராணுவம் ஆப்கானிலிருந்து வாபஸ் பெற துவங்கும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என ஹிலாரி கிளிண்டன் மாநாட்டில் அறிவித்தார்.தாலிபான் வலுவாக உள்ள காந்தஹாரில் கடுமையான ராணுவ நடவடிக்கையை துவக்குவதற்கு தயாரான சூழலில்தான் நேட்டோ படையினரின் வாபஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...