Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 31, 2010

லால்பேட்டையில் இந்து முன்னணி கொடியாற்ற முயற்சி

லால்பேட்டை (30-10-2010): இன்று லால்பேட்டை அருகில் காங்கிருப்பு நகரில் இந்து முன்னணியை சேர்ந்த சிலர் ஒற்றுமையாக வாழும் முஸ்லிம் இந்துக்களுக்கு இடையே மத துவேசத்தை உண்டாக்கும் விதமாக கொடியேற்ற நிகழ்ச்சி நடத்த இருந்தார்கள் , இதனை அறிந்த நமதூர் மக்கள் மற்றும் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்

இதனால் போலீஸ் குவிக்கப்பட்டது சம்பவ இடத்தில் இருந்த காட்டுமன்னார்கோயில் காவல் துறையினர் அமைதியாக இருக்கும்படி கூறினார்கள், பின்பு அங்கு வந்த D S P ,வட்டாட்சியர் மற்றும் கிராம அதிகாரி ஆகியோர் அங்கு வசிக்கும் மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்
அங்கு வசிக்கும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களும் இந்த கொடியேற்றம் அவசியம் இல்லை என்று சொன்னதாலும் இது நாங்கள் ஒற்றுமையாக வாழ்வதை சீர்குலைக்க சிலர் செய்யும் முயற்சி என்று சொன்னதால் D S P ,வட்டாட்சியர் மற்றும் கிராம அதிகாரி கொடியேற்ற தயார் செய்த கம்பத்தை பறிமுதல் செய்தனர், இதனால் இந்து முன்னணியினரின் முயற்சி முறியடிக்கப்பட்டது
பிறகு அனைவரையும் கலைந்து செல்லும்படி காவல்துறையினர் கேட்டுகொன்டர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றார்கள் , இந்த சம்பவத்தினால் காட்டுமன்னார்கோயில் – சிதம்பரம் சாலை போக்குவரத்து சற்று மந்தமானது

இந்த சம்பவத்தின் எதிரொலியாக அனைத்து லால்பேட்டை சேர்ந்த அமைப்பினர் ஒன்று கூடி முடிவெடுத்து இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க காவல் துறையிடம் மனு அளிக்க போவதாக தெரிகிறது
source:lalpet.co.cc

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...