Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 17, 2010

உலக நாடுகளில் செல்போன் உதவியால் வறுமை குறைகிறது: ஐ.நா.சபை தகவல்


நியூயார்க், உலக நாடுகளில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடியே எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது விரைவில் ஒவ்வொரு பேரிடமும் ஒரு செல்போன் இருக்கும் அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

தற்போது வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் 100 பேருக்கு 58 பேரிடம் செல்போன் உள்ளது. ஏழை நாடுகளில் 100 பேரில் 25 பேரிடம் செல்போன் இருக்கிறது. செல்போன் உபயோகத்தால் உலக நாடுகளில் வறுமை குறைந்து வருகிறது என்று ஐ.நா.சபை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. செல்போன் வைத்து இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை செல்போன் மூலமே எளிதாக பெற்று விடுகின்றனர்.

இதனால் அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு பணம் செலவு செய்து செல்ல தேவையில்லை. வீண் அலைச்சல் குறைகிறது. இது போன்ற காரணங்களால் மக்களுக்கு பல வழிகளில் செலவுகள் குறைகின்றன. எனவே வறுமை நிலையும் குறைகிறது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. செல்போன் மூலம் ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...