Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 27, 2010

சவூதி அரேபியாவில், குர்ஆனின் விஞ்ஞான அற்புதங்கள் தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு


குர்ஆன் செயற்பாட்டுக் குழு: புனித அல்குர்ஆனினதும் நபித்துவப் பாரம்பரியங்களினதும் விஞ்ஞான அற்புதங்கள் தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு அக்டோபர் 25ம் திகதி, சவூதி அரேபியாவின் ஜசான் நகரில் ஆரம்பமானது.

நசீஜ் இணையத்தளம் தெரிவிப்பதாவது, இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி, அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் விஞ்ஞான அற்புதங்களுக்கான உலக சம்மேளத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டின் ஓர் அங்கமாக, இச்சந்திப்பின் கருப்பொருளை விளக்கும் கண்காட்சியொன்று இதன் போது இடம்பெறவுள்ளது.

சம்மேளனத்தின் ஜசான் கிளையின் பணிப்பாளர் அப்துல் ரகுமான் பின் அஹ்மத் அல்வாஸ் மக்தலி தெரிவிக்கையில், நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த குர்ஆனிய ஆய்வாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இதில் பங்கு கொண்டு, 'குர்ஆனின் பார்வையில் நோய்த்தடுப்பு இரகசியங்களும் முறைமைகளும்', 'தண்ணீர் பற்றி குர்ஆன் மற்றும் சுன்னாவின் அற்புதங்கள்' மற்றும் 'படைப்புருவாக்கம் பற்றிய குர்ஆனின் விளக்கம்' ஆகிய தலைப்புகளில் ஆய்வுகளை முன்வைக்கவுள்ளனர் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...