Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 20, 2010

நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்: டெல்லி எம் எல் ஏ உச்ச நீமின்றத்தில் மனு!


லோக் ஜனசக்தி கட்சியின் டெல்லி எம்.எல்.ஏ சோயிப் இக்பால் அவர்கள் சமீபத்தில் பாபர் மஸ்ஜித் நிலத்தின் மீது அலஹாபாத் உயர் நீதின்றம் அளித்த தீர்ப்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் ”இந்த தீர்ப்பு இந்திய அடிப்படைய சாசன சட்டத்திற்கு எதிரானது. முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனது அலஹபாத் உயர் நீதின்மறம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்
எம்.எல்.ஏ சோயிப் அவர்களின் வழக்கறிஞர் கஷ்யப் இதை தெரிவித்துள்ளார்.
பி.டி.ஐ செய்திகுறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பாக அலஹாபாத் உயர் நீதிமன்ற வழக்கில் இவர் சம்பந்தப்படாதவர் என்பது குறிப்பிடதக்கது.
இந்திய நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் இந்திய நாட்டின் இறையான்மைக்கும் மதசார்பற்ற தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் அலஹாபாத் தீர்ப்பு அமைந்துள்ளதை எதிர்த்து இவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...