Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 05, 2012

வாக்காளர் பட்டியலில் திருத்தம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ விடுத்துள்ள செய்திகுறிப்பு:
/
1-1-13ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக கடந்த 1-10-12 அன்று கடலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 1-10-12 முதல் 31-10-12 வரை சிறப்பு சுருக்க முறை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மை தேர்தல் அலுவலர் ஆகியோரது அறிவுரைகளின்படி எதிர்வரும் 20-11-12 வரை விண்ணப்பங்கள் பெற்றிட கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது கால நீட்டிப்பு சமயத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறாது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக தங்களது விண்ணப்பங்களை தொடர்புடைய பகுதிகளின் நியமனம் செய்யப்பட்ட இடங்களில் உள்ள நியமன அலுவலர்கள், தொடர்புடைய வாக்குசாவடி நிலை அலுவலர்கள் ஆகியோரிடம் அனைத்து வேலை நாட்களிலும் அளிக்கலாம்.இந்த வாய்ப்பினை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...