Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 13, 2012

மதுபான கடையை அப்புறப்படுத்த கோரி தர்ணா போராட்டம்!

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. நகர செயலர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்டக்குழு காளிதாஸ் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் பிரகாஷ், வட்ட குழு மகாலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் காட்டுமன்னார்கோவில் ரெட்டியார் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும். காட்டுமன்னார்கோவில் பகுதியில் மனைப்பட்டா இல்லாமல் அவதியுறும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்காமல் விவசாய விளை நிலங்களை மனைகளாக மாற்றுவதை கண்டித்தும் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் அப்துல் அஜிஸ், மோகன், ஜாகீர் உசேன், சிங்கார வேல், ஷரிப், விமல்கண்ணன், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...