Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 19, 2012

கொள்ளுமேட்டில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பிஃத்ரா விநியோகம்

முஸ்லிமான அடிமை சுதந்திரமானவர்,ஆண் பெண் பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபி (ஸல்)அவர்கள் விதியாக்கினார்கள்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503 ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள் பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீதும் கடமையாகிய பிஃத்ரா  எனும் பெருநாள் தர்மம் நமதூரில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் கொள்ளுமேடு மட்டுமல்லாது பக்கத்து ஊர்களான  T .புத்தூர் மற்றும் கந்தகுமாரன் ஊர்களின் உள்ள 110 ஏழை எளிய குடும்பங்களுக்கும்  பித்ரா விநியோகம் வழங்கப்பட்டது.இதைபோன்று இர்ஷாதுல் முஸ்லிமீன்,SDPI , தமுமுக சார்பிலும் நமதூரில் பிஃத்ரா வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...