Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 07, 2012

சிதம்பரத்தில் போலி டாக்டர் கைது

சிதம்பரத்தில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிகளில் டாக்டருக்கு படிக்காமலேயே பொது மக்களுக்கு சிகிச்சையளிப்பதாக ஏ.எஸ்.பி., துரைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலி டாக்டர்களை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். நகர சப் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் சிதம்பரம் பகுதியில் அதிரடியாக சோதனை செய்தனர்.

 பொன்னம்பலம் நகரைச்சேர்ந்த சரவணன் என்பவர் தனது வீட்டிற்குமுன்பு கிளினிக் நடத்தி வந்தார்.அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், டாக்டருக்கு படிக்காமலேயே பொது மக்களை ஏமாற்றி சிகிச்சையளித்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்தனர். சிதம்பரத்தில் போலி டாக்டரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...