Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 23, 2012

மின்தடை எதிரொலி பிளஸ்2 தேர்வு முடிவு தெரியாமல் கிராமப்புற மாணவர்கள் அவதி

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளி லிருந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் கணினி மையங்கள் நிறைந்த காட்டுமன்னார்கோவிலுக்கு வந்தனர். காலை 11 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை கணினி மையங்களில் தனது தேர்வு எண்ணை பதிவு செய்து காத்திருந்தனர். இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், இணையதளங்கள் சரிவர செயல்படாததால் மாணவர்கள் திண்டாடினர். பள்ளி ஆசிரியர்களும் கூட தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள இயலவில்லை.

 இந்நிலை 11.30 மணி வரை நீடித்தது. 12 மணியளவில் எப்போதும் போல் மின்தடை ஏற்பட்டது. இத னால் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மாலை 3 மணிக்கு பிறகே தேர்வு முடிவுகளை அறிந்தனர்.
thanks:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...