Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 07, 2018

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -2
நம் பகுதி மக்களின் வாழ்வாதாரமான வீராணம் ஏரி காவேரி நீர் பங்கீட்டு பிரச்சினையால் 1978 & 79ஆம் ஆண்டுகளில் முதல் முதலில் நீர் வரத்து இன்றி காய்ந்தது! 
அப்போது நம் ஊரில் வெட்டுகா பயிர் 20 ஏக்கர் பதியன் பயிர் 20 ஏக்கர் முதுகால் பயிர் 10 ஏக்கர் என விவசாயம் செழிப்போடு இருந்த காலம்.
நம்மை சுற்றி உள்ள நத்தமலை இராயநல்லூர் மானியம் ஆடூர் திருச்சின்னபுரம் லால்பேட்டை கந்தகுமாரன் என அனைத்து ஊர் மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்தான்
பாதிப்புக்கு உள்ளான மக்கள் அன்று இடைப்பட்டத்தில் ஒரு கிணறு வெட்டி ஊற்று நீரை குடத்தில் மொன்டு வெற்றிலைகொடியின் வேரில் ஊற்றி பயிரை வளர்த்து வந்தார்கள்.
பிறகு மூன்று மாதம் முடிவில் மழை நீரால் ஏரி நிரம்ப மக்களும் பெரும் சிரமத்தில் இருந்து மீண்டு வந்தார்கள்!!!
அன்று பாசனத்திற்காக நம் ஊர் ஜாமாத் சார்பில் ஏரிக்கு மேற்கே சித்தமல்லி என்னும் கிராமத்தில் உள்ள 4 போர்செட்களில்

டிசம்பர் 06, 2018

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

*1971 & 72ஆம் ஆண்டு காலத்தில் உதயமானது கொள்ளுமேட்டில் வெற்றிலை கொடிக்கால் தொழிலாளர் நலசங்கம் கலீலுல்லாஹ் தலைவராக செயல்பட்டார்.

*1973 ஆம் ஆண்டு வரை ஊரில் ஒரே கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரே கொடி பச்சிளம் பிறைக் கொடி!!எந்த கொடியும் பறக்காது, பறக்கவும் கூடாது!!!
*1974 ஆம் ஆண்டு வரை இரண்டு வெற்றிலை மண்டி ஏலக்கடைகள்!!
* 1977 ஆண்டில் உருவான திடீர்குப்பம் ( காட்டுத்தெரு)டாக்டர் பாஷா அவர்களின் முயற்சியால் உதயமானது. 24 மனி நேரத்தில் 75கும் அதிகமான குடிசைகள் போட்டு மக்கள் குடி அமர்த்தப்பட்டனர், நம் மாவட்டமே ஆச்சரியத்தில் திகைத்தது !!
*1978 ஆம் ஆண்டு வரை 5 உரக்கடைகள் அது விவசாயிகளின் பொற்காலம்தான் !! 
*1979 ஆம் ஆண்டு வரை S அப்துல்காதிர் ஜவுளிக்கடை சுற்றுபட்டு ஊர்களும் கொள்ளுமேட்டை நோக்கியே வரும்!!
*1979 ஆம் ஆண்டு வரை விவசாயம் செழிக்க 5 உரக்கடைகள் !!
*1979 ஆம் ஆண்டில் டீக்கடை மட்டும் ஊர் முழுக்க 12 கடைகள் ஊரே திருவிழாப்போல் இருக்கும்!!!
*1982 ஆம் ஆண்டு வரை சிலம்பு ஆட்டம் பயிற்சி வாத்தியார் 4 பேர் இருந்தார்கள்
*1983 ஆண்டில் காயிதேமில்லத் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி தொடக்கம்!
*1983 ஆம் ஆண்டு வரை ராமச்சந்திரன் சாத்தான் தேங்காய் மண்டி!! 
*1984 ஆம் ஆண்டு வரை பஹ்வான் சாப்பாட்டுகடை!! 
*1987வரை S அப்துல் வாஹித் மாவு ஆலை (என் மாமா அவர்களுடையது)
*1987 ஆம் ஆண்டுவரை காலை 6 மணிக்கெல்லாம் கடைத்தெரு

ஆகஸ்ட் 15, 2015

கொள்ளுமேடு ஊராட்சி பயனியர் நிழற்குடை பணி என்.முருகுமாறன் அவர்கள் ஆய்வு.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கொள்ளுமேடு ஊராட்சி, வீராணம் ஏரிக்கரையில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூபாய். 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கு நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு அவற்றிற்க்கான பணி துவங்க உள்ள இடத்தில் அளவீடு செய்யப்பட்ட போது சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் அவர்கள் ஆய்வு செய்தார். அருகில் காட்டுமன்னார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் மணிகண்டன், EKPமணிகண்டன் ஆகியோர் உள்ளனர்.
நன்றி:என்.முருகுமாறன் MLA

ஆகஸ்ட் 14, 2015

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்குத்தெருவில் வசிக்கும் A.K இஸ்மாயில் அவர்களின் சகோதரர் காதர் ஒலி அவர்கள்  நேற்று நள்ளிரவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

ஜூலை 29, 2015

ஓர் வபாத் செய்தி!

நமதூர் நூலக வீதியில் வசிக்கும் இம்தியாஸ் சகோதரர்களின் தந்தை ஷேய்க் தாவூத் அவர்கள் இன்று மாலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

ஜூலை 01, 2015

ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம்: கடலூர் மாவட்ட போலீஸ்

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.

இரு சக்கர வாகன ஓட்டிகள் இன்று(புதன்கிழமை) முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர். இதுதொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது– இருசக்கர வாகன ஓட்டுனர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மெயின்ரோடுகளிலும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் இன்று முதல் ஒருவாரத்துக்கு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள்.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும், சப்–இன்ஸ்பெக்டர்களுக்கும், சட்டம்–ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களுக்கும் உரிய உத்தரவுகள்

ஜூன் 30, 2015

நாளை முதல் (01/07/2015) ஏர் இந்தியா விமான லக்கேஜுக்கு கூடுதல் கட்டணம்.

அமீரகத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானங்களில் தாயகம் வரும் பயணிகளின் எட்டு கிலோவுக்கு மேற்பட்ட ஹேன்ட் லக்கேஜுக்கு வரும் முதல் தேதியில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானங்களில் தற்போது பயணிகள் தங்களுடன் கைச்சுமையாக (ஹேன்ட் லக்கேஜ்) சுமார் 8 கிலோ பொருட்களை கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகபட்ச அளவையும் தாண்டி சிலர் 10-15 கிலோ கூடுதல் சுமையை கொண்டு வருவதுண்டு. இதைப்போன்ற உபரி சுமை கொண்டு வருபவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என

ஜூன் 26, 2015

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளை காப்பாற்ற மத்திய - மாநில அரசுகள் அழுத்தம்!

டில்லி: ஜூன் 26 மாலேகான் குண்டுவெ டிப்பில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளின் வழக்கை தீவிரமாக கையாளக் கூடாது என்றும், அவர்களை விரைவில் விடுவிக்கும் வகையில் வழக்காட வேண்டுமென்றும் தனக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்காடி வரும் ரோகினி செலியன்,ஆங்கிலப் பத்ரிகை ஒன்றிற்குப் பேட்டி யளித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் பகுதியில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 37 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை, உள்ளூரைச் சேர்ந்த சில முஸ்லீம் இளைஞர்களைக் கைது செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது தெரியவந்தது.

தொடர் விசாரணைக்குப் பிறகு பிரங்யா சிங் தாக் கூர் என்ற சாமியாரினி, சிவ்நாராயண் கோபால், ராணுவ அதிகாரியான சிரிகாந்த் புரோகித், கல சஹரா, ஷ்யாம் போன் றோர் கைது செய்யப்பட் டனர். இவர்களுடன் மேலும் 12 காவி பயங்கர வாதிகள் கைது செய்யப்பட்டனர். அதில் நான்கு பேர் தற்போது பிணையில் வெளியே வந்து விட்டனர். இவர்கள் இந்து அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த அமைப்பிற்கும் ஆர்.எஸ். எஸ்.க்கும்

சிறுபான்மையின மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கலெக்டர் அறிக்கை!

கடலூர்:சிறுபான்மையின மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.கடலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச்சேர்ந்த சிறுபான்மையின மாணவ–மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ–மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடைய ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், அந்த மாணவ–மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில்(1–ம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் நடப்பு கல்வி ஆண்டில் உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது.

1 முதல் 8–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தலுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து

ஜூன் 23, 2015

சேத்தியாத்தோப்பில் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் தொடங்கி வைத்தார்.

சேத்தியாத்தோப்பு காவல்துறை மற்றும் நண்பர்கள் குழு, ஊர்க்காவல் படை சார்பில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தொடங்கி வைத்தார். சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பஸ் நிலையம், கடை வீதி, குறுக்கு ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இந்த பேரணியில் போலீசார் அனைவரும் ஹெல்மெட்(தலைக்கவசம்) அணிந்தபடி மோட்டார் சைக்கிளில்

ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களுக்கு இறுதி அறிவிப்பு !

கடலூர் : மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் விவரங்கள் அளிக்காதவர்களுக்கு, தேவையான விவரங்களை அளிக்க வசதியாக இறுதி அறிவிப்பு நோட்டீஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

தேர்தல் ஆணையம் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் ஆதார் அட்டை எண், மொபைல் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படுகிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விவரங்களை சேகரித்தனர். மேலும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டசபை தொகுதிகளில் 9 லட்சத்து 48 ஆயிரத்து 314 வாக்காளர்கள் தேவையான விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.இதில், கடந்த 19ம் தேதி வரை, 7 லட்சத்து 56 ஆயிரத்து 551 பேரின் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 763 பேரின் விவரங்கள் படிப்படியாக இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆதார் அட்டை இருந்தும் அதன் விவரம் அளிக்காமல் இடம் பெயர்ந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் ஆதார் எண் விவரங்களை சமர்ப்பிக்க வசதியாக அவர்களுக்கு