புதுடெல்லி : ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருந்தால் காஸ் சிலிண்டர் மானியம் ரத்தாகும். சிலிண்டர் விலை 250 ரூபாய் அதிகரிக்கும். இதற்கான பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக் குழு, அரசிடம் அளித்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை குறைக்க அதில் வழிகள் கூறப்பட்டுள்ளன.
அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு காஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்போது சிலிண்டர் விலையான ரூ.395 மீது அரசு ரூ.250 மானியம் அளிக்கிறது. நிலைக் குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றால், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப காஸ் சிலிண்டர் விலை உயரும்.
அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு காஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்போது சிலிண்டர் விலையான ரூ.395 மீது அரசு ரூ.250 மானியம் அளிக்கிறது. நிலைக் குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றால், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப காஸ் சிலிண்டர் விலை உயரும்.









