Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 04, 2011

ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் இருந்தால் சிலிண்டர் விலை ரூ.250 உயரும்

புதுடெல்லி : ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருந்தால் காஸ் சிலிண்டர் மானியம் ரத்தாகும். சிலிண்டர் விலை 250 ரூபாய் அதிகரிக்கும். இதற்கான பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக் குழு, அரசிடம் அளித்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை குறைக்க அதில் வழிகள் கூறப்பட்டுள்ளன.

அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு காஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்போது சிலிண்டர் விலையான ரூ.395 மீது அரசு ரூ.250 மானியம் அளிக்கிறது. நிலைக் குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றால், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப காஸ் சிலிண்டர் விலை உயரும்.

அம்பானியின் கனவு இல்லம் வக்ப் நிலத்தில – மகாராஷ்டிர அரசு தடுமாற்றம்

மும்பை:ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தன்னுடைய 27 அடுக்கு கொண்ட ஆடம்பர கனவு இல்லம் கட்ட வக்ப் நிலத்தை முறைகேடாக வாங்கியது தொடர்பான பிரச்சனையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மகாராஷ்டிரா அரசு தடுமாற்றத்தில் உள்ளது.

முகேஷ் அம்பானி வக்ப் நிலத்தை ருபாய் 20 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு இப்பிரச்சனை தொடர்பாக மாநில அரசுக்கு வரைந்துள்ள கடிதத்தில் நில விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய புலனாய்வுக் குழுவை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் மகாராஷ்டிர மாநில அரசு சிபிஐ விசாரணை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

மும்பை போஷ் அல்டாமவுண்ட் ரோட்டில் இருக்கும் வக்ப் இடத்தில் முகேஷ் அம்பானி கனவு இல்லம் கட்டத் தொடங்கியதிலிருந்து இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது குறிப்பிடத்கது.

காட்டுமன்னார்கோவிலில் 3 நாட்கள் கோர்ட் புறக்கணிப்பு

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வழக்கறிஞர்கள் 3 நாட்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் நாராயணமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். மாணவர்களின் நலன் கருதி சமச்சீர் கல்வி விஷயத்தில் அரசியலோ, வீண் கவுரவமோ பார்க்காமல் அமல்படுத்தக்கோரி காட்டுமன்னார்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை 3 நாட்கள் கோர்ட் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யப் பட்டது.

ஆகஸ்ட் 03, 2011

தேன் மருத்துவம்!

தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது. தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.

சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.

தேனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு தேனுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள உண்டு.

மலைத்தேன்

இது மலைப் பகுதிகளில் பாறைகளின் இடுக்குகளிலும் பெரிய மரக் கிளைகளிலும் பெரும் கூடாக கட்டியிருக்கும். இந்த வகைத் தேன் அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

காலியாகவுள்ள திருச்சி மேற்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத் தேர்தல்?

திருச்சி அமைச்சர் மரியம் பிச்சையின் மறைவால் காலியாகவுள்ள திருச்சி மேற்குத் தொகுதியில் அடுத்த மாதமே இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் மரியம் பிச்சை. அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் திருச்சி சென்ற மரியம் பிச்சை, எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்த மே 23ம் தேதி சென்னைக்குக் காரில் புறப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

பலம் மிக்க கே.என். நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றதால் மரியம் பிச்சைக்கு அமைச்சர் பதவி கொடுத்து கெளரவித்தார் ஜெயலலிதா. இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக அதில் நீடிக்க முடியாமல் போய் விட்டது மரியம் பிச்சையால்.

மனிதன் செய்ய முடியாததை ரோபோ செய்யும் புது கண்டுப்பிடிப்பு !!

வாஷிங்டன், ஆக.2 தண்ணீரில் நடக்க வேண்டும் என்பது மனிதனின் கனவாக உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் சீன விஞ்ஞானிகள் தண்ணீரில் நடக்கும் அதிசய ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.

பூச்சி போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த “ரோபோ”வால் தண்ணீரில் நடக்க மட்டுமின்றி ஓடவும் முடியும். தண்ணீரில் நடக்கும் ரோபோவுக்கு அசையக்கூடிய தடுப்புகள் போன்ற 2 கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுதவிர தண்ணீரை நீந்தி கடக்கக்கூடிய வகையில் வயர்களால் ஆன 10 கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவைகளை இயக்க கூடிய வகையில் 2 மிக சிறிய எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் எடை குறைவானது. தண்ணீரில் மூழ்கி மீண்டும் மேல் எழுந்து வரக்கூடியது. சீனாவை சேர்ந்த ஷிஜியாங் பல்கலைக்கழகத்தின் கெமிக்கல் என்ஜினீயரிங் பேராசிரியர் குயின்மின்பான் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபோன்ற “ரோபோ”க்கள் ராணுவ உளவு பணிக்கும், தண்ணீரில் மாசுபட்டதை கண்டறியவும் மற்றும் பல செயல்பாடுகளுக்கும் பயன்படும் என விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 02, 2011

கடைகளில் பொருள் வாங்குவோருக்கு பாலித்தீன் பைகளை இலவசமாக கொடுக்க தடை: கட்டணம் வசூலிக்க முடிவு

கடைகளில் பொருட்களை வாங்குவோருக்கு தற்போது பாலித்தீன் பைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த பாலித்தீன் பைகளுக்கு கட்டணம் வசூலித்தால், வாடிக்கையாளர்களே வீட்டில் இருந்து பை கொண்டு வந்து பொருட்களை வாங்குவார்கள். இதனால் பாலித்தீன் பைகளின் பயன்பாடு குறையும். சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

எனவே, கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பாலித்தீன் பைகளை கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த மாதம் 1-ந் தேதி இது அமலுக்கு வந்தது. பெங்களூரில் கடந்த வாரம் அமலுக்கு வந்தது. நாளை (புதன்கிழமை) முதல் நாடுமுழுவதும் இலவச பாலித்தீன் வழங்குவதை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வருகிறது.

கொள்ளுமேடு தவ்ஹீத் மதரசா முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நம்முடைய தவ்ஹீத் மதரசாவின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி ௦01.08.2011 அன்று அசர் தொழுகை முதல இஷா தொழுகை வரை இரண்டு அமர்வுகளாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சி முஹம்மது தாரிப் அவர்களின் முன்னிலையில் இமாம் அவர்களின் கிராத்துடன் தொடங்கியது. தேனீ முபாரக் அவர்கள் கல்வியின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.கடலூர் மாவட்ட தலைவர் ஜாகிர்ஹுசைன்  அவர்களும் செயலாளர் தாஜுத்தின் அவர்களும் சிறப்பு அழைபாலர்கலாக கலந்துக்கொண்டனர்.  


முதல் அமர்வில் முபாரக் அவர்களின் பயானும் இரண்டாம் அமர்வு மக்ரிப் தொழுகைக்கு பிறகு மதரசா மாணவ மாணவிகளின் பயான் மற்றும் கிராத் ஓதும் போட்டியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பெரும் அளவில் மக்களிடையே பேசப்பட்டது என்றால் அது அல்லாஹ் நமக்கு அளித்த மிகப் பெரிய கண்ணியம் என்றேதான் சொல்லவேண்டும்.
செய்தி:அபூ தஃப்ஹீம் 

ஆகஸ்ட் 01, 2011

கடலூரில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

கடலூர் : கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கடலூரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், கூட்ட நெரிசலில் நடக்கும் குற்றங்களைத் தடுக்கவும் நகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என எஸ்.பி., பகலவன் அறிவித்தார். கடலூர் ஆல்பேட்டை, கலெக்டர் பங்களா, செம்மண்டலம், கலெக்டர் அலுவலக சாலை சந்திப்பு, உட்லண்ட்ஸ் ஓட்டல் நான்கு முனை சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, லாரன்ஸ் ரோடு ஆஞ்சநேயர் கோவில் சந்திப்பு சிக்னல், வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பு, திருவந்திபுரம், கடலூர் - சிதம்பரம் சாலையில் ரயில்வே மேம்பால சந்திப்பு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பில் நான்கு பக்கமும் கண்காணிப்பு கேமரா சோதனை ஓட்டமாக பொருத்தப்பட்டுள்ளது. கேமராவின் செயல்பாடுகளை எஸ்.பி., பகலவன் நேற்று பார்வையிட்டு விளக்கங்களைக் கேட்டறிந்தார். டி.எஸ்.பி., வனிதா, இன்ஸ்பெக்டர் சுந்தர வடிவேலு, ராமதாஸ், சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தபாபு, திருவேங்கடம், விசுவநாதன் மற்றும் கார்த்திக் கம்யூனிகேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் குழு உடனிருந்தனர். 

வீராணம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது எப்போது : தள்ளிப் போவதால் விவசாயிகள் புலம்பல்

சிதம்பரம் : வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் துவங்கி, தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வரை அமைச்சர்களின் தேதி கிடைக்காததால் தண்ணீர் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போகிறது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடியை துவக்க முடியாமல் உள்ளனர்.காவிரி டெல்டா கடைமடை பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் தண்ணீர் திறப்பு காலதாமதமாகியது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் ஜூன் 12ம் தேதிக்கும் முன்பாக 6ம் தேதியே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணையில் தேக்கப்பட்டு கடந்த மாதம் 29ம் வீராணத்திற்கு திறந்து விடப்பட்டது. விராணம் நிரம்பியதையொட்டி கடந்த 12 ஆண்டுகளில் ஜூலை மாதம் வீராணத்தில் இருந்து சம்பா சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுகிறது என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால் வீராணம் பாதியளவு நிரம்பியதுமே கடந்த ஜூலை 10ம் தேதி அவசர, அவசரமாக சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி துவங்கியது.

இன்று துவங்குகிறதுரம்ஜான் மாதம்

கெய்ரோ: மத்திய ஆசியாவில் உள்ள, இஸ்லாமிய மதத் தலைவர்கள் அனைவரும், இன்று (திங்கள்) முதல் ரம்ஜான் மாதம் துவங்குவதாக, அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, எகிப்து, சவுதி அரேபியா, லெபனான், சிரியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கத்தார் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில், "ரம்ஜான் புனித மாதம் இன்று முதல் துவங்குகிறது .