Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 18, 2019

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -10
1960 ஆம் ஆண்டு கொள்ளுமேட்டில் தபால் நிலையம் (Post office) கொண்டுவரப்பட்டது.ஆயங்குடி ஆசிரியர் மர்ஹும் இப்ராஹிம் மற்றும் எனது பெரிய பாவா மர்ஹும் N முஹம்மது அலி ஆகியோரின் பெரும் முயற்சியால் அது சாத்தியமானது.அன்றைய Post master ராக மர்ஹும் இப்ராஹிம் அவர்களே இருந்தார்கள்.பிறகு முஸ்லிம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணி மாற்றம் பெற்று விடைப்பெற்றார்.
பின்னர் மர்ஹும் K ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் போஸ்ட் மாஸ்டர் பணியில் தன் ஓய்வு காலம் வரை ஓய்வின்றி உழைத்தார்.அவருடன் மர்ஹும் S முஹம்மது கௌஸ் அவர்களும் இணைந்து 20 வருடங்கள் பணிசெய்து விருப்ப ஓய்வுபெற்றார்.பின்னர் K அப்துல்லாஹ் அவர்கள் Post man ஆக 25 வருட அனுபவம் பெற்று பதவி உயர்வு அடைந்து சிதம்பரம் தலைமை தபால் நிலையத்திர்க்கு மாற்றலாகி ஓய்வுப்பெற்றார். தற்போது R ஜெக்கரியா அவர்கள் நம் ஊரின் பிரதிநிதியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் வாழ்த்துக்கள்....
விவசாயமும் வளைக்குடா வேலைகளுமே நம் மூலதனம் என எண்ணியதால் என்னவோ நமதூரில் 1995 ஆம் ஆண்டு வரை படித்த பட்டதாரிகள்
மிக சொர்ப்பமானவர்களே! கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கியே இருந்துள்ளோம்! எனது மச்சான் AV ஹபீபுர்ரஹ்மான் சின்னதெரு அப்துல்ஹக்கீம்,சைக்கிள் கடை மர்ஹும் JM யூசுப் என படித்தவர்களை எண்ணிவிடலாம்!!
AV ஹபீபுர்ரஹ்மான் அவர்கள் கொள்ளுமேடு முஸ்லிம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பின் உயர்நிலைப் பள்ளியின் HMஆகவும் திறம்பட செயலாற்றி ஓய்வுபெற்றார்.அப்துல்ஹக்கீம் அவர்கள் Bsc Agri முடித்து ஆடுதுறை அரசு விவசாயப் பண்ணையில் மக்கள் தொடர்பு அலுவளராக பணிப்புரிந்து ஓய்வுபெற்றார்.மர்ஹும் JM யூசுப் அவர்கள் IT தொழிற்கல்வி படித்து திருச்சி பெல் நிறுவனத்தில் பணிசெய்து விருப்ப ஓய்வுபெற்று சுயதொழில் செய்தார்.
கஷாப் அப்துல் மஜிது அவர்களின் அண்ணன் மர்ஹும் ஜெக்கரியா அவர்கள் 1977 ஆம் ஆண்டில் தமிழக காவல் துறை தேர்வானையத்தில் பதிவிட்டு காவல்துறை பயிற்சிக்கு தேர்வானார்,ஆனால் கடைசிவரை பணியில் அமர்த்தப்படவில்லை அவரின் முயற்சிக்கு வாழ்த்தை தெரிவிப்போம்!!
1972 ஆம் ஆண்டில் AS அப்துல் பாஷித் அவர்கள் முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டுத்துறை ஆசிரியராக பனியாற்றி பிறகு லால்பேட்டை பேரூராட்சியில் அலுவலராக பனிபுரிந்தார்.1988 ஆம் ஆண்டில் கொள்ளுமேடு ஊராட்சி மன்ற மக்கள் நல பனியாளராக A அபுல்ஹூசைன் அவர்கள் பணிப் புரிந்தார்.1992 இல் முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் M I சிராஜுத்தீன் அவர்கள் கிளர்க்காக பணி செய்து ஓய்வு பெற்றார்.

அரசு உதவிப்பெறும் ஆரம்ப பள்ளி,உயர் நிலைப் பள்ளி,கால்நடை மருத்துவமனை,கிராம பஞ்சாயத்து அலுவலகம்,நூலகம்,பால்வாடி,தபால் நிலையம் இந்தியன் வங்கி என பல்வேறு அலுவலகங்கள் கொள்ளுமேட்டில் காலம் காலமாக இருந்தும் நம்மால் அங்கே வேலை வாய்ப்பைபப் முழுமையாக பெறமுடியவில்லை என்பது நாம் நமது கல்வி அறிவை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது!..
இன்று நமதூர் இளைஞர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் பெற்று நூற்றுக் கணக்கில் பட்டதாரிகளாக வந்தவண்ணம் இருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ்...இருந்தும் ஒருவர் இருவரை தவிர அரசு வேலைப் பெறுவதில் ஆர்வம் இல்லாமல் இருப்பது ஏனோ?
அயல்நாட்டு மோகத்தை
அப்புறப்படுத்தி
அரசு வேலை பெறுவதில்
அக்கரை செலுத்துவோம்...
என்றும்
அன்வர்தீன்
3 1 2019

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...