Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 29, 2013

லால்பேட்டை கைகாட்டி மீன் கடைகளில் ஐஸ் பெட்டிகள் பறிமுதல்!

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை கைகாட்டி மீன் கடைகளில் உள்ள ஐஸ் பெட்டிகள் பேரூராட்சி தலைவர் சபியுல்லா தலைமையில் பறிமுதல் செய்யப்பட்டது. காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை கைகாட்டியில் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. அங்கு 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் விற்பனை செய்து வருகின்றனர். கடைகளில் பழைய மீன்களை ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திற்குப் புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து பழைய மீன்களை விற்பனை செய்யக் கூடாது என பல முறை வலியுறுத்தப்பட்டும் பழைய மீன்கள் விற்பனை தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று காலை லால்பேட்டை பேரூராட்சி தலைவர் சபியுல்லா தலைமையில் மீன் கடைகளில் தீடீர் சோதனை செய்யப்பட்டது. அப்போது பழைய மீன்களை ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனை செய்த 3 கடைகளில்
இருந்து, ஐஸ் பெட்டிகளை பேரூராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...