Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 08, 2013

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ரா. கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2013-2014 கல்வி ஆண்டுக்கு கல்வி உதவித்தொகைப் பெற மாணவ, மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் மாணவர்கள் (9-ஆம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்நலத் துறை மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள் மூலம் 2013-2014-ஆம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.

குடும்பத்தில் அதிகபட்சம் இருவருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவ, மாணவிகள் புதிய மற்றும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் படிவங்களை
தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிலையங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறும் விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கான கேட்புப் பட்டியலை உரிய படிவத்தில் பதிவு செய்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

source:Dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...