Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 05, 2011

108 ஆம்புலன்சில் பணிபுரிய வரும் 9ம் தேதி ஆட்கள் தேர்வு

இலவச ஆம்புலன்ஸ் 108ல் பணிபுரிய வரும் 9ம் தேதி ஆட்கள் தேர்வு நடக்கிறது தமிழக அரசு சார்பில் ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் செயல்படுத்தி வரும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையில் மெடிக்கல் டெக்னீஷியன் பிரிவில் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்வதற்கான நேர்காணல் கடலூர் பீச்ரோட்டில் உள்ள ரோட்டரி ஹாலில் வரும் 9ம் தேதி நடக்கிறது. மெடிக்கல் டெக்னீஷியன் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங், தாவரவியல், விலங்கியல், மைக்ரோபயாலஜி, பயோ டெக்னாலஜி, உயிரிவேதியியல் மற்றும் மூன்றரை ஆண்டு ஜி.என்.எம்., மற்றும் இரண்டு ஆண்டு ஏ.என்.எம்., ஆகிய பாடப்பிரிவினை படித்திருக்க வேண்டும். வயது 20 முதல் 30 வரை இருக்க வேண்டும். சேர விரும்புவோர் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்று, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் காலை 9 மணிக்குள் நேரில் வர வேண்டும். விவரங்களுக்கு 044- 28888060 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை செயல் அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...