Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 12, 2011

தமிழகத்தில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு திட்ட

தமிழகத்தில் தற்போது 18 சதவீதமாக உள்ள, உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை, 2025-ம் ஆண்டுக்குள், 25 சதவீதமாக உயர்த்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் இதனை தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்பேற்ற 100 நாட்களில், தமிழகத்தில் 11 கல்லூரிகள் புதிதாக திறக்கப்பட்டு, இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். பட்டமளிப்பு விழாவில், கலந்து கொண்ட தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ரோசய்யா, 395 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...