Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 11, 2011

ஆயங்குடி பள்ளி தலைமை ஆசிரியர் அறை பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்கள் கிழிப்பு

காட்டுமன்னார் கோவில் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் அறை பூட்டை உடைத்து முக்கிய ஆவ ணங்கள், சான்றி தழ்கள் கிழிக்கப்பட்டு உள்ளது.இது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூட்டு உடைப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே ஆயங்குடி முஸ்லிம் உதவி பெறும் பள்ளி உள் ளது.இந்த பள்ளியில் 322 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் பள்ளி வழக்கம் போல் நடந்தது.மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து பள்ளி தலைமை ஆசிரியர் கமாலுதீன் தனது அறையை பூட்டி விட்டு சென்று விட்டார்.

நேற்று காலை பள்ளிக் கூடத்தை திறந்து சுத்தம் செய் வதற்காக துப்புரவு ஊழி யர்கள் பள்ளிக் கூடத் திற்குள் வந்தனர்.அவர்கள் தலைமை ஆசிரியர் அறை அருகே சென்ற போது , அவரது அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் இதுபற்றி பள்ளி தாளாளர் இலாகி பட்சி , தலைமை ஆசிரியர் கமாலு தீன் ஆகியோருக்கு தகவல் தெரி வித் தனர்.

ஆவணங்கள் கிழிப்பு
அதன்பேரில் பள்ளி தாளாளர் , தலைமை ஆசி ரியர் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் 3 பீரோக்கள் உடைக் கப் பட்டு, அதில் இருந்த ஆவணங் கள், சான்றிதழ்கள் கிழிக்கப் பட்டு சிதறி கிடந்தது.

அருகில் உள்ள கழிவு நீர் வாய்க்காலிலும் ஆவணங்கள் ,சான்றிதழ்கள் கிழிக்கப்பட்டு கிடந்தது. இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியர் கமாலுதீன் காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய் தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் சந்திரசேகர், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் நேரில் சென்று விசா ரணை நடத்தினர்.

மேலும் பீரோவை உடைத்து உள்ளே வந்து ஆவணங்களை கிழித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அந்த பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...