Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 21, 2011

காட்டுமன்னார்கோவிலில் மண்ணெண்ணெய் கடத்தல்

:காட்டுமன்னார்கோவிலில் கடத்தப்பட்ட 440 லிட்டர் மண்ணெண்ணெயை சிதம்பரம் ஆர்.டி.ஓ., பறிமுதல் செய்தார்.காட்டுமன்னார்கோவில் பகுதியில் ரேஷன் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் நேற்று சிதம்பரம் ஆர்.டி.ஒ., இந்துமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் செல்லும் வழியில் உடையார்குடி ரம்ஜான் தைக்கால், வடக்கு கொளக்குடி செல்லும் சாலையில் மினி வேன் நின்று கொண்டிருந்தது.
வேனை சோதனை செய்ததில் 3 பேரல்களில் ரேஷன் மண்ணெண்ணெய் கடத்திச் செல்வது தெரியவந்தது. உடன் 440 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் டாடா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தார். மேலும் வடக்கு கொளக்குடியை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார், 26 என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாசில்தார் விஸ்வநாதன், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
-DM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...