Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 21, 2011

தங்கத்தால் 2 ஆண்டுகளில் அரசிற்கு ரூ.1 லட்சம் கோடி வருமானம்

புதுடில்லி : தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய அரசிற்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1,00,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐஎம்எஃப் இடம் இருந்து 200 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.

 ஐ.எம்.எஃப்., இடம் இருந்து இந்தியா ரூ.30,000 கோடிக்கு தங்கம் வாங்கியது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.15,000 ஆக உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியிடம் 557.7 டன் தங்கம் உள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, 2009ம் ஐ.எம்.எஃப்., யிடம் இருந்து மத்திய வங்கி 200 டன் தங்கம் வாங்குவதற்கு முன் ரூ.50,718 மதிப்பிலான தங்கம் வைப்பு இருந்தது. தற்போது உள்நாட்டு சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.29,000 ஆக உள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.1,60,000 கோடியாகும். 2011ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி கணக்கீட்டிபடி மத்திய வங்கியிடம் உள்ள தங்கத்தின் விலை ரூ.1,31,442 கோடியாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...