Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 30, 2012

சிதம்பரத்தில் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி!

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சியில் சிறுவர்களுக்கான பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் "சிடி' மற்றும் "டிவிடி'க்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கண்காட்சியில் 20 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் எழுத்துருக்கள் மல்டி மீடிய "சிடி', குழந்தைகளுக்கான "சிடி', பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களுக்கான "சிடி'க்கள், மொபைல் மற்றும் மடிகணினிகளில் தமிழைப் பயன்படுத்தும் மென்பொருள்கள் அச்சு வடிவமைப்பு, முன்னணி பத்திரிகை நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழ் யூனிகோடு எழுத்துருக்கள், தமிழ் 99 விசைப்படகுகள், விக்கிபீடியா இணைய பக்க வடிவமைப்புகள், கைபேடு மற்றும் ஆண்ட்ராய்டு போன்ற பல கணினி கருவிகளில் மென்பொருள்கள் காட்சியில் இடம் பெற்றிருந்தன. முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சமச்சீர் கல்வி "டிவிடி', ஸ்போக்கன் இங்கிலீஷ், இலக்கணம், பொது அறிவு, பஞ்சதந்திரக் கதைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் "சிடி' மற்றும் "டிவிடி'க்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பிளஸ் 2 மாணவர்களுக்கான ஒரு மதிப்பெண் வினா வங்கி, லேர்ன் சப்ஜெக்ட் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு "சிடி'க்கள், கணி திறன் அறிய ஒளிப்பியார்டுகளில் ஏதுவான "சிடி'க்களும் 20 சதவீத தள்ளுபடி விலையில் கண்காட்சியில் விற்பனை செய்தனர்.

 இதுதவிர குழந்தைகள், நர்சரி பாடல்கள், நல்லொழுக்கக் கதைகள், வரலாற்று நூல்கள் அதிகளவில் இடம் பெற்றிருந்தன. பொன் தமிழ் மென்பொருள்கள், பொன்மடல் ஒன்பது விசைகளிலேயே விரைவாக தமிழில் தட்டச்சு "கே 12' முறையில் 10 நிமிடங்களில் கற்றுக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல், டேப்லட், கணிபொறிகளில் விரல், குச்சி, மவுஸ் போன்றவற்றால் கையினால் எழுதி தமிழில் உள்ளடக்கலாம். "தமிழ் 99', "கே 12' தட்டச்சு ஆங்கிலம் (ஒலிமாற்றம்) ஹைபோன், ஹைபேடு முதலியவற்றில் கையினால் எழுதி உள்ளடக்குவதோடு குறுஞ்செய்தி, ஈமெயில், கோகுல், பேஸ்புக் போன்றவற்றிக்கு எழுதி நேரடியாக அனுப்பும் மென்பொருளும் கண்காட்சியில் இடம் பெற்றன. கையடக்க சிபேர்டு கண்காட்சியில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்த விஷயங்கள் நம் உள்ளங்கையில் அடக்கிவிடும் வகையில் மானிட்டர் கீ போர்டு, நான்கு யுஎஸ்பி., லேர்ன் போர்டு

டிசம்பர் 29, 2012

ஓர் வபாத் செய்தி!

நமதூர் கடைத் தெருவில் வசிக்கும் மைனர் மகன் முஹம்மது இக்பால் அவர்களின் துணைவியார் சலிமா பேகம் அவர்கள் இன்று மாலை சவூதி அரேபியாவில் தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசேசெலுத்தும் : முதல்வர் அறிவிப்பு

பிற்படுத்தப்பட்டமிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தைஅரசேசெலுத்தும் : முதல்வர் அறிவிப்பு
பிற்படுத்தப்பட்டமிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழு கல்விகட்டணத்தைஅரசே செலுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
தற்போது கல்லூரிகளில் அதிகரித்துள்ள கற்பிப்புக் கட்டணம் மற்றும்சிறப்புக்கட்டணம் ஆகியவற்றினால் பிற்படுத்தப்பட்டோர்மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினர் மாணவமாணவியர்களின் கல்வி மற்றும்மாணவமாணவியர் சேர்க்கையில்எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதிருக்க அரசுமற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில்பயிலும் பிற்படுத்தப்பட்டோர்மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்மாணவமாணவியருக்குதேர்வுக் கட்டணம்முழுமையாக வழங்குவது போல்அவர்கள்செலுத்தும் கற்பிப்புக் கட்டணம் மற்றும்சிறப்புக் கட்டணம் ஆகியவற்றைபள்ளிமேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ்முழுமையாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அரசு துறைகளால் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணங்களை உடனடியாகபிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர் மாணவ,மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்புஉதவி திட்டத்தின் கீழ் உயர்த்தி வழங்கவும்முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பொறியியல்மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு அரசின் ஒதுக்கீட்டின்கீழ்தேர்வு செய்யப்படும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட,சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்விகட்டணம் உயர்த்தும் போது கல்வி உதவிதொகையும்உயர்த்தி வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பால்74ஆயிரத்து 181 மாணவர்கள் பயன்பெறுவார்கள்மேலும்,பிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர்நலத்துறைகளின்கட்டுப்பாட்டில் இயங்கும் விடுதிகளிலும்மதுரைதிண்டுக்கல்,தேனி மாவட்டங்களில்இயங்கி வரும் கள்ள சீரமைப்பு பள்ளிகளில் பயிலும் 10 மற்றும்12 ஆம் வகுப்புமாணவர்களுக்கு இலவச வழிகாட்டி நூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதே போன்றுபெரம்பலூர்சிவகங்கைதிருவண்ணாமலைவிழுப்புரம்தருமபுரி,திண்டுக்கல்கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் ஆகிய மிகவும் பின் தங்கியமாவட்டங்களில்பயிலும் அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளியில் பயிலும் 10மற்றும் 12 ஆம்வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா வழிகாட்டி 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை

கடலூர், : கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளில் புழங்கு காலத்தை 1.1.13 முதல் 31.12.13 வரை நீட்டித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி நியாய விலை கடைகளில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது.

 எனவே குடும்பத்தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை கடைக்கு சென்று 2013ம் ஆண்டிற் கான உள்தாள் இணைப்பு பெற்று கொண்டு கடைகளில் பராமரிக்கப்படும் 2012ம் ஆண்டின் வழங்கல் பதிவேட்டில் கையொப்பமிட்டு அல்லது இடது கை பெருவிரல் ரேகை பதிக்க கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப அட்டை களை புதுப்பிக்க நியாய விலை கடை பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனு டைய விபரம் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. தங்களுக்குரிய நாளில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

டிசம்பர் 27, 2012

வீராணம் ஏரியில் தண்ணீர் திறக்க கோரி சாலை மறியல்

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. எனவே கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், குமராட்சி,லால்பேட்டை உள்ளிட்ட கடைமடை பகுதியில் சம்பா பயிர்கள் நீர் வசதியின்றி வாடத்தொடங்கின.

அதையடுத்து காட்டு மன்னார்கோவிலை அடுத்த லால்பேட்டை பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு இன்று விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் இளங்கீரன், பிரகாஷ், பார்த்தீபன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அந்த பகுதிக்கு துணை ஆட்சியர் சுப்ரமனியன்  துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகசாமி, காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார், தாசில்தார் தில்லைகோவிந்தன், பொதுப்பணித்துறை அதிகாரி வளர்மதி ஆகியோர் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் விவசாயிகள் சாலை மறியலை கைவிட மறுத்தனர். அதையடுத்து லால்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்குடி, சென்னை சாலை பகுதியில் 3 மணி மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்படது.
-lalpet.net

இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா!



டிச,27: விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். [அல்குர்-ஆன் 24 : 2]


திருமணம் முடித்த ஒர் நபர் விபச்சாரம் செய்ததற்காக அவருக்கு மரண தண்டணை வழங்கச் சொல்லி நபிகளார் உத்தரவிட்டார்கள் (புகாரி : 6828 ஹதீஸின் கருத்து)

குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினால்தான் குற்றங்கள் குறையும் என்பதும், அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பதும்தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

குற்றச் செயல்களுக்கு திருக்குர்-ஆன் கூறும் தண்டனைகளை அதிமேதாவிகளும், அறிவுஜீவிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்வோரும் விமர்சனம் செய்து வந்தனர். திருடியவர்களுக்கு கையை வெட்டுதல், விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கசையடி மற்றும் கல்லால் எறிந்து அவர்களை கொலை செய்யும் சட்டங்கள், கொலைக்குக் கொலை, கண்ணுக்கு கண், பல்லுக்குப்பல் என்று இஸ்லாம் கூறும் தீர்வுகள் காட்டுமிராண்டித்தனமானவை. 

அவைகள் மனித நேயத்திற்கு எதிரானவை. இஸ்லாம் வழங்கச் சொல்லும் தண்டனைகள் மனிதத்தன்மை அற்றவை. இந்தச் சட்டங்களை பின்பற்றச் சொல்லிவரும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈவுஇரக்கமற்றவர்கள்; பழமைவாதிகள்; அடிப்படைவாதிகள்; பிற்போக்குவாதிகள் என்று குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசினர் இந்த அதிமேதாவிகள்.

எந்த நாவினால் இஸ்லாத்தைக் குறைகூறினார்களோ! எந்த நாவு இந்த சட்டங்களெல்லாம் மனிததன்மையற்ற செயல்கள் என்று சொன்னதோ அதே நாவுகள் இப்போது இஸ்லாம் கூறும் இத்தகைய சட்டங்கள்தான் தற்போது வேண்டும் என்று சொல்கின்றன. வல்ல இறைவன் அவர்களை அவ்வாறு சொல்லவைத்துள்ளான்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்:

கடந்த 16.12.12 அன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் தனது ஆண் நண்பருடன் நள்ளிரவில் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பினார். அவர்கள் இருவரும் கதவுகள் மூடப்பட்ட சொகுசுப்பேருந்தில் பயணித்தனர். 

அப்போது அந்த 23 வயது மருத்துவக்கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை தாக்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல் அதே பேருந்தில் இருந்த அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் அடித்து தூக்கி வெளியே வீசி விட்டது.

பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளது. அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடக்கம்.

தற்போது இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் போடவேண்டும் என இந்தியா முழுவதுமுள்ள அனைவரும் ஒருமித்து குரல் எழுப்பியுள்ளார்கள். போராட்டங்கள் வெடித்துள்ளன. 

அந்தப் பெண்ணை கற்பழித்த கயவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்று மாதர் சங்க அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் இவ்வாறு அவர்களுக்கு வழங்கப்படும் தூக்குதண்டனையை அனைவரும் காணும் வகையில் நிகழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டத்தில் குதித்த மாணவிகள் வைத்துள்ளனர்.

இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வரச் சொல்லும் பா.ஜ.க:

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சம்பவத்தைப்பற்றி நீண்ட நேரம் விவாதம் நடந்துள்ளது. நாடாளுமன்ற அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவராக உள்ள பா.ஜ.க.வைச் சேர்ந்த சுஷ்மா சுவராஜ், மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர்களை தூக்கிலிட வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். அதே கோரிக்கையை அ.தி.மு.க சார்பில் மைத்ரேயன் வைத்துள்ளார்.

எந்தவிதமான எதிர்ப்புமின்றி அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கையை வரவேற்றுள்ளனர். உள்துறை அமைச்சர் ஷிண்டேவும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது குறித்து

டிசம்பர் 24, 2012

வீராணம் ஏரியை திறக்க கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளின் விவசாயிகள் வீராணம் ஏரி மூலம் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் வீராணம் ஏரி தாமதமாக திறக்கப்பட்டது. அதனால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பை தாமதமாக தொடங்கினர். இந்நிலையில் ஏரியில் கொள்ளளவு குறைந்ததால் ஏரி மூடப்பட்டது. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகி வந்தன.

வழக்கமாக ஆண்டுக்கு 4 முறை ஏரி நிரம்பும், ஆனால் அந்த ஆண்டு 1 முறை கூட நிரம்ப வில்லை. இந்நிலையில் விவசாயத்திற்கு தண்ணீர் தராமல் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆகையால் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெய்வாசல், திருநாரையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் உள்ள லால்பேட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பொதுப்பணித்துறை அலுவலர் தில்லை கோவிந்தன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் இன்று இரவு 8 மணிக்குள் விவசாயத்திற்கு வீராணம் ஏரி திறக்கப்படவில்லை என்றால் மீண்டும்

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி டெல்டா விவசாயிகளுக்கு டீசல் மானியம்

கடலூர்: காவிரி டெல்டா சம்பா சாகுபடி விவசாயிகள் டீசல் மானியம் பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா பகுதியில் சம்பா நெல்சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு தொகுப்பு திட்டமானது தற்போது கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள டெல்டா பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வரால் டெல்டா பாசன நெல் விவசாயிகளுக்கு உதவும் வகையில் கூடுதல் சிறப்பு தொகுப்பு திட்டத்தையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்டா சம்பா நெல்சாகுபடி விவசாயிகள் பாசனத்திற்காக டீசல் பம்ப் உபயோகப்படுத்தினால் டீசலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. ஏக்கருக்கு ரூ.600 வீதம் அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் பரப்பளவிற்கு ரூ. 3 ஆயிரம் மானியமாக வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கப்படும். எனவே டீசல் பம்ப் செட்டினை சொந்தமாகவோ அல்லது வாடகையாகவோ பயன்படுத்தி பாசனம் செய்யலாம். எனவே டீசல் பம்ப் மூலம் பாசனம் மேற்கொள்ளும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள டெல்டா நெல் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மைத்துறை

பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை: மத்திய அரசு ஆலோசனை !

பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில்,குரூரமான பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை பெற்றுத்தரும் வகையில் சட்டங்கள் கொண்டுவர ஆலோசிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தள்ளது. டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகேட்டு நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.டெல்லியில் 6 வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது.

இந்தியா கேட் முன்பு கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பின்னர் ஊர்வலமாக ஜனாதிபதி மாளிகை நோக்கிச்சென்றனர். காவல்துறையின் தடுப்புகளை மீறிச் சென்ற மாணவ - மாணவிகள், ஒருகட்டத்தில் ஜ்னாதிபதி மாளிகையை ஒட்டிய சுற்றுச்சுவரில் ஏற முயற்சித்தனர்.ஆனால் ஜனாதிபதியை சந்தித்து முறையிட மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு முழக்கம் எழுப்பிய அவர்கள், காவல்துறையினர் எச்சரித்தும் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.இதனையடுத்து காவல்துறை வாகனங்களை மாணவர்கள் தாக்கத்தொடங்கியதால்,தண்ணீரைப் பீய்ச்சி அடித்து மாணவர்களை கலைக்க நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, தடியடி நடத்தத் தொடங்கினர். மேலும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் காவல்துறையினர் வீசி எறிந்தனர். காவல்துறையினரின் தடியடியில் ஒரு சில மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். இருப்பினும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்கும் மக்களின் போராட்டம் தொடர்ந்தது.

 மரண தண்டனை : இந்நிலையில் டெல்லி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிவித்துள்ளார். கைதாகியுள்ள அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை பெற்றுத் தருவதற்கு போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும்,விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். மாணவி பாலியல் வன்முறையின் பின்னணி குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.குரூரமான பாலியல் வன்முறைகளை அரிதினும் அரிதான குற்றங்களாகக் கருதி மரணதண்டனை பெற்றுத்தரும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஆலோசிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: முதலமைச்சர் ஆதரவு
    பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் உணர்வுக்கு மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது இல்லத்தில் குழந்தைகளுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியின் போது அவர் கூறியதாவது:- பாலியல் வழக்குகளை விரைவாக

டிசம்பர் 23, 2012

பூரண மதுவிலக்கு! ஓர் இஸ்லாமிய அணுகுமுறை!



மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருட்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. உடலுக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் மது என்ற விஷம் மனிதனுக்கு உகந்ததல்ல என்ற உண்மையைப் படித்தவர்களும், படிக்காத பாமரர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். 

மதுவை ஒழிப்பதற்காக காந்தி எவ்வளவோ பாடுபட்டார். ஆங்கிலேயர் ஆட்சியில் கள்ளுக்கடை மறியல் என்ற போராட்டத்தை அறிவித்து போதைப் பொருளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்தப் போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளது. எத்தனையோ சமூக ஆர்வலர்களும், மக்கள் நல இயக்கங்களும் இதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் மதுவை மக்கள் மனதிலிருந்து தூக்கி எறிவதற்கு இவர்களால் முடிவதில்லை. 

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் திருந்த வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் மதுவை விட்டுவிட முடிவதில்லை. எனவேதான் போதைக்கு அடிமையானவர்கள் இந்தக் குடிப்பழக்கத்தை மறக்க மருத்துவமனைகளை நாடிச்செல்கின்றனர். சில மருத்துவர்கள் பிரத்யேகமாக இந்தப் பிரச்சனைக்கு மாத்திரம் மருத்துவம் செய்ய முன் வருகிறார்கள். எவ்வளவு மருத்துவமனை பெருகினாலும் மது ஒழிந்தபாடில்லை. நாளுக்கு நாள் மதுக்கடைகளும், மதுப் பிரியர்களும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறார்கள்.

 திருக்குர்ஆன் செய்த மருத்துவம் 

குடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டு,எழுத்தறிவில்லாமல் காட்டு மிராண்டிகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயம் தன் கையாலே மது பேரல்களை உடைத்தெறியும் அளவிற்குப் பெரும் மறுமலர்ச்சி ஒன்று அரபு தேசத்தில் உருவானது.அரபியர்களிடத்தில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சிக்குக் குர்ஆன் அவர்களுக்கு அளித்த அற்புத பயிற்சியே காரணம். இந்தப் பயிற்சி தான் அவர்களுக்கு மதுவின் மீது இருந்த மோகம் செல்வதற்கு சிறந்த மருந்தாக இருந்தது.

எடுத்த எடுப்பிலேயே மதுவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட காலகட்டங்களில் வௌ;வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது. மது நல்ல பொருள் அல்ல என்ற கருத்தை முதலில் குர்ஆன் மறைமுகமாக முன்வைத்தது. 

அல்லாஹ் தன் திருமறையில்... 

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. [அல்குர்ஆன் 16:67]

இந்த வசனம் மது தடை செய்யப்படுவதற்கு முன்னால் இறங்கிய வசனம். இந்த வசனத்தில் இறைவன் உணவு மற்றும் மது ஆகிய இரண்டையும் பற்றிப் பேசுகிறான். இதன் பிறகு மதுவில் கேடுதான் அதிகமாக இருக்கிறது என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்தியது என்றாலும் மதுவைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கட்டளையை குர்ஆன் இப்போதும் இடவில்லை. 

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே) உம்மிடம் கேட்கின்றனர்.அவ்விரண்டிலும் பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும்,மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:219) 

இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக்கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது.ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப் பட்டுள்ளது.தொழுகைக்கு போதையில்லாமல் வர வேண்டுமென்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்குப் பழகிக் கொள்வார்கள். எனவேதான் நுட்பமான நுண்ணறிவு படைத்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் 
அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான். 

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு  நெருங்காதீர்கள்! (அல்குர்ஆன் 4:43) இந்த வசனம் இறங்குவதற்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.
அலீ (ரலி) மற்றும் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) ஆகிய இருவரையும் அன்சாரி குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவைக் குடிக்கக் கொடுத்தார்.(இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ(ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதி விட்டார். அப்போதுதான் (மேற்கூறப்பட்ட) அல்குர்ஆன் 4:43 வசனம் இறங்கியது அறிவிப்பவர்: அலீ(ரலி) நூல்: அபூதாவூத் (3186) 

இறுதிக் கட்டமாக மதுவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிட்டது. 

ம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:90) 

எத்தனையோ சட்டங்கள் ஏட்டளவில் இருக்கின்றன. மக்களில்; எவரும் இந்தச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. பொருட்படுத்துவதும் இல்லை. ஏனென்றால் யாருமே கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கடினமாக இச்சட்டங்கள்

டிசம்பர் 19, 2012

டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியாது!


வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? என்ற கேள்விக்குறியோடு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஏற்படுத்திய பீதிதான் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்த பரபரப்பு செய்தி.



டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியும் என்று சொல்கின்றார்களே! இவர்கள் சொல்லும் இந்த கட்டுக்கதை உண்மையில் சாத்தியமா? அவ்வாறு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் செய்திகளை யாராவது சொல்ல இயலுமா என்ற சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்ததுதான் இத்தகைய செய்திகளை இவர்கள் வெளியிடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

மறைவான விஷயங்களை எவராலும் அறிய இயலாது :
நாளை என்ன நடக்கவுள்ளது?. அடுத்த நிமிடம் என்ன நடக்க இருக்கின்றது? என்பதை அறியும் ஆற்றல் எந்த மனிதருக்கும் இல்லை. இதை சிந்திக்கும் திறன் படைத்த யாரும் விளங்கிக்கொள்ளலாம். அப்படி இருக்கும்போது டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்ற செய்தி எப்படி மற்ற மனிதர்களுக்குத் தெரியும் என்ற சாதாரண சிந்தனைத்திறன் இருந்தாலே இது மிகப்பெரிய கட்டுக்கதை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
வல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான்:
யுக முடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.  [அல்குர்-ஆன் 31 : 34]

மேற்கண்ட ஐந்து விஷயங்களையும் படைத்த இறைவனைத்தவிர வேறு யாராலும் அறிந்து கொள்ள இயலாது.
மற்றொரு இடத்தில் அல்லாஹ் சொல்லிக்காட்டுகின்றான்:
(முஹம்மதே) யுக முடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர். அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது? அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.
அல்குர்-ஆன் 79 : 42முதல் 45வரை
மறைவான செய்திகளை தனது தூதர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருக்கின்றான். அப்படி சில மறைவான செய்திகளை தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்த இறைவன், தனது தூதருக்குக் கூட உலக அழிவு நாள் எப்போது வரும் என்ற செய்தியை அறிவித்துத்தரவில்லை என்றால் வேறு எந்த மனிதருக்காவது இந்த செய்தியை அறிந்து கொள்ள இயலுமா?
அதுமட்டுமல்லாமல், வல்ல இறைவன் தனது திருமறையில் கூறியிருக்கக்கூடிய முன்னறிவிப்புகளின் அடிப்படையிலும், நபிகளார் கூறிக்காட்டியுள்ள முன்னறிவிப்பின் படியும் உலக முடிவு நாள் என்பது இரண்டு மூன்று நாட்களில் நடந்து முடிந்துவிடாது. அது வருவதற்குண்டான சில அடையாளங்களை அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லிச் சென்றுள்ளார்கள். எண்ணற்ற சிறிய அடையாளங்களும், மாபெரும் பத்து அடையாளங்களும் நிகழாதவரை உலக அழிவுநாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
அந்த பத்து அடையாளங்களாவன :
1 – புகை மூட்டம்
2 – தஜ்ஜால்
3 – ஈஸா நபியின் வருகை
4 – யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
5 – அதிசயப் பிராணி
6 – மேற்கில் சூரியன் உதிப்பது
7, 8, 9 – மூன்று பூகம்பங்கள்
10 – பெரு நெருப்பு
மேற்கண்ட பத்து அடையாளங்கள் நிகழாதவரை யுக முடிவு நாள் ஏற்படாது. (குறிப்பு : உலக அழிவு நாள் ஏற்படப்போவதற்கு முன் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும், அது குறித்த முழுமையான முன்னறிவிப்புகள் குறித்தும் முழுவதுமாக அறிய விரும்புவோர் சகோதரர் பீஜே அவர்கள் எழுதியுள்ள “கியாமத் நாளின் பத்து அடையாளங்கள்” என்ற நூலை பார்வையிடவும்)
இவை அனைத்தும் நிகழ்வதற்கு முன்பாகவே உலக அழிவு நாள் ஏற்படும் என்று யாரேனும் சொன்னால் அவர் பொய்யர் என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் சொல்லிவிடலாம்.
டிசம்பர் 21ஆம் தேதிக்குப்பிறகும் உலகம் அழியாமல் இருக்கும் எனபதே உண்மை. இந்த அறிவு இல்லாமல் மக்களிடம் பீதியைக் கிளப்பி ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி காசு பார்க்கின்றன.
மாயன் காலண்டர் என்னும் மடத்தனமான காலண்டர்:
டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம்தான் மிகவும் வேடிக்கையானது. மாயன் காலண்டர் எனும் காலண்டர் பிரகாரம் 2012ஆம் ஆண்டின் டிசம்பர் 21ஆம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என்பதுதான் அவர்கள் கூறும் வேடிக்கையான காரணம்.
அது என்ன மாயன் காலண்டர்?:
கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், மாயா என்றோர் இனம் தென்அமெரிக்காவில் இருந்ததாம். மாயா இனத்தைச் சேர்ந்த​வர்கள் வானவியல் சாஸ்திரங்களிலும், கட்டடக் கலையிலும், கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனராம். அதற்கு ஒரே சாட்சிதான் மாயன் காலண்டராம்.
தென்அமெரிக்காவில் வாழ்ந்த மாயா சமூகத்து மக்கள் பயன் ​படுத்திய காலத்தின் கணக்கு முறைகளைக் கொண்டு இந்தக் காலண்டர் உருவாக்கப்பட்டதாம். கி.மு. 3113 தொடங்கி கி.பி. 2012 டிசம்பர் 21-ம் தேதி மாயன் காலண்டர் முடிவுக்கு வருகிறது. அதற்கு பிறகு அந்த காலண்டரில் தேதிகள் இல்லையாம். வான சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்த(?) மாயா இனத்தைச் சேர்ந்தவர்கள், 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதியுடன் காலண்டரை முடித்துக் கொள்ள என்ன காரணம்? “அதற்குப் பிறகு இந்த உலகமே இருக்காது என்பதுதான் மாயன் காலண்டர் சொல்லும்