Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 22, 2012

சிதம்பரம் கடலோர பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை கருவி

சிதம்பரம் கடலோர பகுதிகளில் பொருத்துவதற்காக தமிழக அரசு சுனாமி எச்சரிக்கை கருவியை வழங்கியுள்ளது. சிதம்பரம் அருகே கடலோர கிராமங்களான கிள்ளை, முடசல் ஓடை, எம்ஜிஆர்திட்டு, பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை, புதுகுப்பம் போன்ற பகுதிகளில் ஏற்கனவே சுனாமி தாக்கியதால் பலர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதிகளில் அடிக்கடி சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

 இதனையொட்டி இப்பகுதிகளில் சுனாமி வருவது குறித்து எச்சரிக்கும் வகையில் தமிழக அரசு சுனாமி எச்சரிக்கை கருவியினை வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ள இக்கருவி விரைவில் கடலோர கிராமத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் பொருத்தப்பட உள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...