Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 25, 2012

திமுக, அதிமுக மோதல் 55 பேர் மீது வழக்கு

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் நேற்று முன்தினம் திமுக, அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 55 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் அருகே திமுக, அதிமுகவினரிடையே நேற்று முன்தினம் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையில் போலீசார் நேற்று வாகன அணிவகுப்பு நடத்தி பொதுமக்களின் அச்சத்தை போக்கினர்.

 இதைத்தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பேரூராட்சி தலை வரின் உறவினர் நிர்மலாமேரி (40), காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இப் புகாரின் பேரில் போலீ சார் கணேசமூர்த்தி உட்பட 30 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள னர். இதேபோல பாதிக்கப்பட்ட உடையார்குடி சின்ன மசூதி தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் பன்னீர்செல்வம் (44), என்பவர் கொடுத்த புகாரின் மீது போலீசார், சுமார் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...