Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 04, 2012

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வெளியீடு: தஞ்சை மாணவர் ஸ்ரீநாத் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்



எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடந்தது. பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தனித் தேர்வர்கள் 11 லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் மூலம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவ-மாணவி களின் எண்ணிக்கை 10 லட்சத்து 84 ஆயிரம். பழைய பாடத்திட்டத்தின் கீழ் தனியாக தேர்வு எழுதிய வர்கள் 64 ஆயிரத்து 777 பேர். 19 ஆயிரத்து 574 தனி தேர்வர்கள் நேரடியாக பரீட்சை எழுதினார்கள். 

3 ஆயிரத்து 33 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று 1.30 மணிக்கு வெளியிடப்பட்டது. 

இதில் தஞ்சை பி.ஆர்.பள்ளி மாணவர் ஸ்ரீநாத் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மேலும், 496 மதிப்பெண்கள் பெற்று 6 மாணவர்கள் 2-ம் இடமும், 495 மதிப்பெண்கள் பெற்று 11 மாணவர்கள் 3-ம் இடமும் பிடித்தனர். 

தேர்வு எழுதியவர்களில் 86.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 89 சதவீதம் பேரும், மாணவர்களில் 83.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழ் பாடத்தில் 3 பேரும், கணிதத்தில் 1141 பேரும், அறிவியலில் 9237 பேரும், சமூக அறிவியலில் 5305 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

thanks :maalaimalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...