Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 28, 2011

கூலி ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க திட்டம்:மக்காச்சோளம் பயிரிட விவசாயிகளுக்கு யோசனை

சென்னை:விவசாயத்திற்கான கூலி ஆட்கள் பற்றாக்குறை, கடுமையாக உள்ளதால், விவசாயிகள், மாற்றுப் பயிராக மக்காச்சோளத்தை பயிரிட, விவசாயத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

தமிழகத்தில், 1.3 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில், 63 லட்சம் எக்டேரில் விவசாயம் நடைபெறுகிறது. மொத்த மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில், தொழிற்சாலைகள் பெருக்கம் காரணமாக விவசாயத்திற்கான கூலி ஆட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது.

குறிப்பாக, நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில், கூலி ஆட்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது.

குறைந்த நேர வேலை, போதுமான சம்பளம் என்று கிடைப்பதால், விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்த பல குடும்பங்கள் தற்போது, தொழிற்சாலை வேலைகளை தேடிச் செல்கின்றனர்.
இதனால், விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அதிக சம்பளம் தரத் தயார் என்று கூறினாலும், கடினமான வேலை என்பதால் பல விவசாயப் பணிகளை புறக்கணிக்கின்றனர்.

இதனால், விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயக் கூலி ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரங்கள் ஓரளவிற்கு உதவினாலும், அனைத்து பணிகளையும் இயந்திரங்களை கொண்டு செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, கூலி ஆட்களின் தேவையை குறைக்கும் வகையிலான பயிர்களை விளைவிக்க வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கு, விவசாயத் துறை மாற்று பயிர் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து, காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் மையத்தின் உழவியல் துறை பேராசிரியர் முருகன் கூறியதாவது:வேளாண் சாகுபடியில், தற்போது நடைமுறையில் உள்ள பயிர்களுக்கு பதிலாக, மாற்றுப் பயிர்களை பயிரிட்டால் அதிக உற்பத்தி, லாபம் பெற முடியும்.

அதிக வெப்ப நிலை, மிதமான நீர் நிலை, வறட்சி ஆகிய தட்ப, வெப்ப நிலையை கொண்ட மாவட்டங்களில் வாழை, பருத்தி, சூரியகாந்தி, வீரிய ஒட்டு மக்காச்சோளம், சோயா பீன்ஸ் போன்ற பயிர்களை பயிரிட்டால், அதிக வருமானம் கிடைக்கும்.குறிப்பாக, வீரிய ஒட்டு மக்காச்சோள சாகுபடி, விவசாயிகளுக்கு நல்ல பலனை அளிக்கும். மக்காச்சோள சாகுபடிக்கு குறைந்த அளவிலான வேலையாட்கள் இருந்தாலே போதுமானது.

அனைத்து வகை மண்ணிலும், ஆண்டு முழுவதும் மக்காச்சோள சாகுபடியை செய்யலாம். நெற்பயிருடன் ஒப்பிடும் போது, சாகுபடி செலவு இதற்கு மிகவும் குறைவு. பூச்சி, புழு தாக்குதலும் குறைவாகவே இருக்கும் என்பதால் மருந்து செலவு குறையும்.தற்போது, மக்காச்சோளத்திற்கான தேவை, நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. கோழி மற்றும் மாட்டுத் தீவனங்களுக்கு, மக்காச்சோளம் தான் முக்கிய மூலப்பொருள் என்பதால், தீவன தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிகமாக கொள்முதல் செய்யத் துவங்கியுள்ளன.

தமிழகத்தில் தேவைக்கேற்ற அளவு மக்காச்சோள உற்பத்தி இல்லை என்பதால், தற்போது பீகார், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் கொண்டு வரப்படுகிறது. ஒரு ஏக்கரில் இருந்து சராசரியாக 2,500 முதல் 3,000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இதன் மூலம், ஒரு ஏக்கருக்கு செலவு போக, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்,' என்றார்.எஸ்.உமாபதி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...