Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 16, 2011

ரம்ஜானை முன்னிட்டு பிஎஸ்என்எல் '786' சலுகை

சென்னை : ரம்ஜானை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு 786 ரூபாய்க்கு சிறப்பு ரீசார்ஜ் செய்தால் 786 ரூபாய்க்கு முழுமையாக பேசும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரம்ஜானை முன்னிட்டு பிரீபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. 786 ரூபாய்க்கு சிறப்பு ரீசார்ஜ் செய்தால் பிடித்தம் ஏதுமின்றி இதே மதிப்பிற்கு முழுமையாக பேசிக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி 786 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம். இச்சலுகையில் 50 சதவீதம் உள்ளூருக்கும், மீதி 50 சதவீதம் வெளிமாநிலங்களுக்கும் எஸ்எம்எஸ் அனுப்ப முடியும்.

இச்சலுகையை ரீசார்ஜ் செய்த தேதியில் இருந்து 180 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே டாக் டைம் கையிருப்பில் இருந்தால், அது புதிய தொகையுடன் சேர்க்கப்படும். அதேபோல் ஏற்கனவே எஸ்எம்எஸ் பூஸ்டர் போடப்பட்டு மீதியிருக்கும் எஸ்எம்எஸ்களும் கணக்கில் சேர்க்கப்படும். செல்லுபடியாகும் நாள் ஏற்கனவே கையிருப்பில் இருந்தால் அதுவும் 180 நாட்களுடன் சேர்க்கப்படும். ஆனால் மொத்த பேசும் காலம் 450 நாட்களுக்கு அதிகமாகாது. இந்த சிறப்பு ரீசார்ஜ் சலுகை செப்டம்பர் 10ம் தேதி வரை அமலில் இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...