Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 10, 2011

விவசாய வேலைக்கு ஆள் இல்லை

புதுடில்லி: "வேலை வாய்ப்பு தேடி, கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு, மக்கள் இடம் பெயர்வதால், விவசாயத்தில் ஈடுபட போதிய தொழிலாளர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் ஹரிஸ் ரவாத், லோக்சபாவில் கூறியதாவது: விவசாயத்தை அதிகம் நம்பியுள்ள மாநிலங்களில், விவசாயத்தில் ஈடுபட போதிய தொழிலாளர்கள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக, கிராமங்களில் இருந்து, நகர்ப்புறங்களுக்கு ஏராளமான மக்கள் இடம் பெயர்கின்றனர். மேலும், அரசால் செயல்படுத்தப்படும், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலும், பலர் பணியாற்றுகின்றனர். இந்த இரண்டு காரணங்களாலும், விவசாய தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாய தொழிலாளர்களுக்ககான குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்கும்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஹரிஸ் ரவாத் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...