Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 17, 2011

மத்திய ரயில்வேயில் 9 பெட்டி ரயில்கள் 12 பெட்டிகளாக மாற்றம்

சி.எஸ்.டி: அடுத்த மாதம் 11ம் தேதி முதல் 9 பெட்டிகளுடன் தற்போது இயக்கப்பட்டு வரும் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்படும் என மத்திய ரயில்வே பொது மேலாளர் குல் புஷன் தெரிவித்தார். மத்திய ரயில்வேயில் நாள் ஒன்றுக்கு 1,573 சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு மத்திய ரயில்வேயில் மட்டும் 3.81 மில்லியன் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த ரயில்கள் 77 ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக

இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெருகி வரும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப, மத்திய ரயில்வேயில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் 12 பெட்டிகள் கொண்ட

ரயில்களாக மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி முதல் 9 பெட்டிகள் கொண்ட 75 ரயில்கள் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்பட இருப்பதாக மத்திய ரயில்வேயின் பொது மேலாளர் குல் புஷன் தெரிவித்தார். இதன் மூலம் கூடுதலாக நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் பயணிகள் பயணம் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...