Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 11, 2011

நாடு முழுவதும் 19 கோடி பேருக்கு ஆதார் அட்டை தயார்!

நாடு முழுவதும் இதுவரை 1.9 கோடி பேருக்கு சிறப்பு அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.மத்திய திட்டத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் மக்களவையில் கூறியதாவது:குடிமக்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் காணும் வகையிலும் வெளிநாட்டவர், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும் சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஒருவர் இந்தியாவின் குடிமகன்தான் என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரமாக இந்த அட்டை இருப்பதால் இந்த அட்டை ‘ஆதார்’ என்று அழைக்கப்படுகிறது. 

ஒவ்வொரு குடிமகனின் ரேகை மற்றும் விழிப்படலம், வசிக்கும் பகுதி ஆகியவை சேகரிக்கப்பட்டு அடையாள அட்டை தயாரிக்கப்படும். இந்திய சிறப்பு அடையாள அட்டை ஆணையம் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை 1.9 கோடி பேருக்கு ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அட்டை தயாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. அடையாள அட்டைக்காக பெயர்களை பதிவு செய்யும் பணியில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...